Latest News :

தற்காப்புக்காக பற்களை பயன்படுத்தலாம் என்று சட்டம் சொல்கிறது - பெண்ணை கடித்த நடிகை மதுமிதா விள
Sunday September-03 2017

‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படத்தில் சந்தானத்தின் ஜோடியாக நடித்த மதுமிதா. ஜாங்கிரி மதுமிதா என்ற பெயரில் பல படங்களில் காமெடி வேடங்களில் நடித்து வருகிறார்.

 

சென்னை வளசரவாக்கத்தில் வசித்து வரும் மதுமிதா, தனது பக்கத்து வீட்டில் வசிக்கும் உஷா என்ற பெண்ணுடன் ஏற்பட்ட பிரச்சினையின் போது, அவரது கையை கடித்துவிட்டார். இதையடுத்து இரு தரப்பினரும் போலீசில் புகார் அளிக்க, அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

 

இந்த நிலையில், பெண்ணை கடித்த விவகாரம் தொடர்பாக இன்று வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள மதுமிதா அதில், “தான் வசித்து வரும் அடுக்குமாடி குடியிருப்பில் பராமரிப்பு கட்டணம் குளறுபடி காரணமாக உஷா என்பவருடன் பிரச்னை ஏற்பட்டது. உஷா, ஒவ்வொருவரையும் தவறாகச் சொல்லியிருப்பது தெரிந்தது. உறவாடிக் கெடுப்பது போல அவர் செயல்பட்டது தெரியவந்தது. இதனால், வேறு ஒருநபரிடம் பராமரிக்கும் பொறுப்பு கொடுக்கப்பட்டது. அதன் பிறகு நடந்த சம்பவம், எங்களுக்கு பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தியது. வாடகை வீட்டில் கூட இப்படி நடக்காது. மின்சாரத்தை கட் பண்ணுவது, ஏ.சி. இணைப்பைத் துண்டிப்பது, மாடிப்படிகளில் எண்ணெய்யை ஊற்றி விடுவது போன்ற செயல்கள் நடந்தன. இது, அடுக்குமாடியில் குடியிருந்தவர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியது.

 

எல்லோரும் சேர்ந்து உஷா மீது போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தோம். அப்போது, போலீஸார் உஷாவை எச்சரித்து அனுப்பினர். பின்னர், உஷாவின் டார்ச்சர் அதிகமானது. அப்போது கூட நான் அமைதியாக இருந்தேன். சூட்டிங்கில் இருக்கும் போது, எனக்கு ஆதரவாக வந்தவர்களுக்கு உஷாவால் தொல்லை அதிகமானது.

 

சம்பவத்தன்று போலீஸ் உயரதிகாரி ஒருவர், வீட்டில் உஷாவிடம் விசாரித்துக் கொண்டிருந்தார். அப்போது, அந்த போலீஸ் அதிகாரியையும் என்னையும் தவறாக பேசினார் உஷா. அதை நான் தட்டிக்கேட்டேன். இதனால் வாக்குவாதம் அதிகமானது. அப்போது, உஷா என்னைக் கடுமையாகத் தாக்கினார். அதை அருகிலிருந்தவர்கள் தடுக்க முயன்றனர். அவர் என்னைத் தாக்கியதைத் தடுக்கவே லேசாகக் கடித்தேன். எங்களுக்கு நடந்த தகராறில், உஷாவின் குழந்தை நடுவில் மாட்டியதால், நான் என்ன செய்வதென்று திகைத்தேன். 

 

என்னைக் குறித்த தவறான தகவல்களைச் சொல்லி வருகிறார் உஷா. அவர், டார்ச்சர் கொடுக்க ஆரம்பித்தவுடன், நான் புகார் கொடுத்திருக்க வேண்டும். நம்முடைய சட்டத்தில் ஒரு பெண் தாக்கப்படும்போது தற்காப்புக்காக, நகத்தையும் பற்களையும் பயன்படுத்தலாம் என்று சொல்லப்பட்டுள்ளது. நான் தவறு செய்திருந்தால் என்னை மன்னித்துவிடுங்கள். மக்கள் தான் என்னுடைய முதல் கடவுள். இன்று நடக்கும் விசாரணையில், காவல்துறையில் நல்ல முடிவு எடுப்பார்கள் என்று நம்புகிறேன்” என்றார்.

Related News

425

’டிவைன் மிராக்கல் அண்ட் சீக்ரெட்ஸ் 2’ புத்தகம் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற திரை பிரபலங்கள்
Thursday July-03 2025

தன்வீர் தயானந்த யோகி ஜெயந்தி விழா ஜூலை 2 ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில், இவ்விழாவை முன்னிட்டு ’தெய்வீக அற்புதங்களும் மற்றும் ரகசியங்களும்’ என்று சொல்லக்கூடிய ‘டிவைன் மிராக்கல் அண்ட் சீக்ரெட்ஸ்’ (Divine Miracles and Secrets - Part 2) என்ற புத்தகத்தின் இரண்டாம் பாகம் வெளியிடப்பட்டது...

பெரிய டங்களில் சட்ட விரோத செயல்கள் தான் பெரிதாகக் காட்டப்படுகின்றன - ’மகேஸ்வரன் மகிமை’ பட விழாவில் கே.ராஜன் பேச்சு
Tuesday July-01 2025

எஸ்பிஏ புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் உருவாகி இருக்கும் படம் ’மகேஸ்வரன் மகிமை’...

’தேசிங்குராஜா 2’-வின் வெற்றிக்கு விமல் தான் முக்கிய காரணமாக இருக்கப் போகிறார் - இயக்குநர் எழில் உறுதி
Tuesday July-01 2025

நடிகர் விஜய் நடித்து மிகப்பெரிய வெற்றிபெற்ற ‘துள்ளாத மனமும் துள்ளும்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான இயக்குநர் எழில், திரையுலகில் தனது 25 வருடத்தில் அடியெடுத்து வைத்துள்ளார்...

Recent Gallery