Latest News :

சீரியல் நடிகை யாஷிகா கொலையில் மரமம்! - அம்மா பரபரப்பு புகார்
Wednesday February-20 2019

சமீபத்தில் சென்னையில் தற்கொலை செய்துக் கொண்ட சீரியல் நடிகை யாஷிகா, தற்கொலை செய்துக் கொள்ளவில்லை, அவர் கொலை செய்யப்பட்டுள்ளார், என்று அவரது அம்மா போலீசிடம் புகார் அளித்துள்ளதால், இந்த சம்பவத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

பல சீரியல்களில் நடித்த யாஷிகா, சில திரைப்படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்திருக்கிறார். காதல் தோல்வியால், சமீபத்தில் தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்துக் கொண்டார்.

 

ஆனால், யாஷிகாவின் மரணம் தற்கொலை அல்ல, கொலை, என்று அவரது அம்மா கூறியுள்ளார். 

 

இது குறித்து மேலும் கூறிய யாஷிகாவின் அம்மா, என்னுடைய மகள் யாஷிகா தற்கொலை செய்யவில்லை, அவருடைய காதலர் அரவிந்த் தான் கொலை செய்தார். போலீசாரால் கண்டெடுக்கப்பட்ட கடிதம் என் மகள் எழுதியது இல்லை.

 

50 சவரன் என்னுடைய மகளின் தங்கம் காணவில்லை. நான் வருவதற்கு முன் என் மகளின் இறுதி சடங்கு முடிந்துவிட்டது. இன்னொரு விஷயம் என்னவென்றால் என் மகள் அரவிந்த்தால் கர்ப்பமாக இருந்தால் அதையும் அவர்கள் கலைக்க சொல்லி கொடுமை செய்தார்கள், என்று தெரிவித்துள்ளார்.

Related News

4250

ஷேனிடம் நிறைய கற்றுக் கொண்டேன் - நடிகர் சாந்தனு
Saturday September-20 2025

தயாரிப்பாளர் சாந்தோஷ் டி.குருவில்லா மற்றும் தயாரிப்பாளர் பினு ஜார்ஜ் அலெக்சாண்டர் இணைந்து தயாரித்திருக்கும் படம் தான் பல்டி...

நடிகர் ரோபோ சங்கர் மறைவு! - திரையுலகம் அதிர்ச்சி
Thursday September-18 2025

பிரபல திரைப்பட காமெடி நடிகர் ரோபோ சங்கர் உடல் நலக்குறைவால் இன்று உயிரிழந்தார்...

ஜீ5-ன்‘வேடுவன்’ இணையத் தொடர் அக்டோபர் 10 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகிறது
Wednesday September-17 2025

இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ZEE5, தனது அடுத்த அதிரடி தமிழ் ஒரிஜினல் சீரிஸான “வேடுவன்” சீரிஸ், வரும் அக்டோபர் 10 ஆம் முதல் ஸ்ட்ரீமாகவுள்ளதாக அதிகாரப்பூர்வ  அறிவிப்பை வெளியிட்டுள்ளது...

Recent Gallery