காஷ்மீர் புல்வாமா மாவட்டத்தில் தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 40 க்கும் மேற்பட்ட இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இவர்களது குடும்பத்திற்கு சினிமா நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள் என பலர் பல வகையில் உதவி செய்து வருகிறார்கள்.
இந்த நிலையில், உயிரிழந்த வீரர்களில் தமிழகத்தை இரண்டு வீரர்களும் அடங்குவர். இவர்களது குடும்பத்திற்கு நடிகர் அம்சவர்தன் நிதி உதவி வழங்கியுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு கிராமத்தை சேர்ந்த சுப்ரமணியம் மற்றும் அரியலூர் மாவட்டம் உடையார்பாளையும் பழூர் கார்குடி கிராமத்தை சேர்ந்த சிவ்சந்திரன் ஆகிய வீரர்களது குடும்பத்தாரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய நடிகர் அம்சவர்தன், அவர்களது குடும்பத்தாருக்கு தலா ரூ.2 லட்சம் நிதி உதவி வழங்கினார்.
பழம்பெரும் நடிகர் ரவிச்சந்திரனின் மகனான நடிகர் அம்சவர்தன், தற்போது ‘பீட்ரூ’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இவர், ஏழை எளிய மக்களுக்கும், மாணவர்களுக்கும் பல உதவிகளை சத்தமில்லாமல் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
90களின் இறுதியில் மற்றும் 2000களின் தொடக்கத்தில் தனது மென்மையான நடிப்பால் ரசிகர்களை வசீகரித்த நடிகர் அபாஸ், பத்தாண்டுகளுக்குப் பிறகு தமிழ் சினிமாவிற்கு திரும்பி வருகிறார்...
புரட்சிக் கலைஞர் கேப்டன் விஜயகாந்த் நடிப்பில் அவரது 100வது படமாக வெளியாகி மிகப்பெரிய வெற்றியையும் வசூல் சாதனையையும் செய்த படம் ‘கேப்டன் பிரபாகரன்’...
விஜய் ஆண்டனி நடிப்பில், அருண் பிரபு இயக்கத்தில், ஷெல்லி காலிஸ்ட் ஒளிப்பதிவில், பாத்திமா விஜய் ஆண்டனி கம்பெனி, விஜய் ஆண்டனி பிலிம் கார்பரேஷன் நிறுவனம் சார்பாக மீரா விஜய் ஆண்டனி வழங்கும் படம் “சக்தித் திருமகன்”...