காஷ்மீர் புல்வாமா மாவட்டத்தில் தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 40 க்கும் மேற்பட்ட இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இவர்களது குடும்பத்திற்கு சினிமா நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள் என பலர் பல வகையில் உதவி செய்து வருகிறார்கள்.
இந்த நிலையில், உயிரிழந்த வீரர்களில் தமிழகத்தை இரண்டு வீரர்களும் அடங்குவர். இவர்களது குடும்பத்திற்கு நடிகர் அம்சவர்தன் நிதி உதவி வழங்கியுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு கிராமத்தை சேர்ந்த சுப்ரமணியம் மற்றும் அரியலூர் மாவட்டம் உடையார்பாளையும் பழூர் கார்குடி கிராமத்தை சேர்ந்த சிவ்சந்திரன் ஆகிய வீரர்களது குடும்பத்தாரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய நடிகர் அம்சவர்தன், அவர்களது குடும்பத்தாருக்கு தலா ரூ.2 லட்சம் நிதி உதவி வழங்கினார்.
பழம்பெரும் நடிகர் ரவிச்சந்திரனின் மகனான நடிகர் அம்சவர்தன், தற்போது ‘பீட்ரூ’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இவர், ஏழை எளிய மக்களுக்கும், மாணவர்களுக்கும் பல உதவிகளை சத்தமில்லாமல் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்க, அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா நடிப்பில் வெளியான 'தாய் கிழவி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது...
வ்யோம் என்டர்டெயின்மென்ட்ஸ் (Vyom Entertainments) நிறுவனம் சார்பில் விஜயா சதிஷ் மற்றும் ஆர்...
மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்க, மிகப்பெரிய படைப்பாக உருவாகி வரும் ’பேட்ரியாட்' திரைப்படத்தில் நடிகை நயன்தாரா நடித்துள்ள கதாபாத்திரத்தின் சிறப்பு போஸ்டர் பெண்கள் தினத்தை முன்னிட்டு நேற்று முன் தினம் வெளியிடப்பட்டுள்ளது...