பல தொலைக்காட்சி தொடர்களிலும், திரைப்படங்களிலும் நடித்து வருபவர் பிர்லா போஸ். இவர் சமீபத்தில், வீடு விஷயத்தில் சிலரிடம் தான் ஏமாற்றப்பட்டது தொடர்பாக கூறியிருந்தார். மேலும், அவர் போலீசில் புகாரும் அளித்திருந்தார்.
அதாவது, பிர்லா போஸ் தற்போது குடியிருக்கும் வீட்டை, சிலர் தங்களது சொந்த வீடு என்று கூறி, பணம் பறித்திருக்கிறார்கள். ஆனால், தற்போது வங்கியில் இருந்து வீட்டை காலி செய்ய சொல்வதால், தன்னிடம் பணம் பறித்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கூறி, நடிகர் பிர்லா போஸ் போலீசில் புகார் அளித்துள்ளார். ஜெயலலிதா முதல்வராக இருந்தபோதே, இது தொடர்பாக தான் புகார் கொடுத்ததாகவும், ஆனால், அது குறித்து எந்த நடவடிக்கையும் போலீசார் எடுக்கவில்லை என்றும் கூறியிருந்தார்.
இந்த நிலையில், ”தான் தற்கொலை செய்துக் கொண்டேன் என தகவல் வந்தால் நம்பாதீர்கள், அது கொலையாக தான் இருக்கும்.” என்று நடிகர் பிர்லா போஸ் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
90களின் இறுதியில் மற்றும் 2000களின் தொடக்கத்தில் தனது மென்மையான நடிப்பால் ரசிகர்களை வசீகரித்த நடிகர் அபாஸ், பத்தாண்டுகளுக்குப் பிறகு தமிழ் சினிமாவிற்கு திரும்பி வருகிறார்...
புரட்சிக் கலைஞர் கேப்டன் விஜயகாந்த் நடிப்பில் அவரது 100வது படமாக வெளியாகி மிகப்பெரிய வெற்றியையும் வசூல் சாதனையையும் செய்த படம் ‘கேப்டன் பிரபாகரன்’...
விஜய் ஆண்டனி நடிப்பில், அருண் பிரபு இயக்கத்தில், ஷெல்லி காலிஸ்ட் ஒளிப்பதிவில், பாத்திமா விஜய் ஆண்டனி கம்பெனி, விஜய் ஆண்டனி பிலிம் கார்பரேஷன் நிறுவனம் சார்பாக மீரா விஜய் ஆண்டனி வழங்கும் படம் “சக்தித் திருமகன்”...