பல தொலைக்காட்சி தொடர்களிலும், திரைப்படங்களிலும் நடித்து வருபவர் பிர்லா போஸ். இவர் சமீபத்தில், வீடு விஷயத்தில் சிலரிடம் தான் ஏமாற்றப்பட்டது தொடர்பாக கூறியிருந்தார். மேலும், அவர் போலீசில் புகாரும் அளித்திருந்தார்.
அதாவது, பிர்லா போஸ் தற்போது குடியிருக்கும் வீட்டை, சிலர் தங்களது சொந்த வீடு என்று கூறி, பணம் பறித்திருக்கிறார்கள். ஆனால், தற்போது வங்கியில் இருந்து வீட்டை காலி செய்ய சொல்வதால், தன்னிடம் பணம் பறித்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கூறி, நடிகர் பிர்லா போஸ் போலீசில் புகார் அளித்துள்ளார். ஜெயலலிதா முதல்வராக இருந்தபோதே, இது தொடர்பாக தான் புகார் கொடுத்ததாகவும், ஆனால், அது குறித்து எந்த நடவடிக்கையும் போலீசார் எடுக்கவில்லை என்றும் கூறியிருந்தார்.
இந்த நிலையில், ”தான் தற்கொலை செய்துக் கொண்டேன் என தகவல் வந்தால் நம்பாதீர்கள், அது கொலையாக தான் இருக்கும்.” என்று நடிகர் பிர்லா போஸ் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்க, அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா நடிப்பில் வெளியான 'தாய் கிழவி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது...
வ்யோம் என்டர்டெயின்மென்ட்ஸ் (Vyom Entertainments) நிறுவனம் சார்பில் விஜயா சதிஷ் மற்றும் ஆர்...
மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்க, மிகப்பெரிய படைப்பாக உருவாகி வரும் ’பேட்ரியாட்' திரைப்படத்தில் நடிகை நயன்தாரா நடித்துள்ள கதாபாத்திரத்தின் சிறப்பு போஸ்டர் பெண்கள் தினத்தை முன்னிட்டு நேற்று முன் தினம் வெளியிடப்பட்டுள்ளது...