பல தொலைக்காட்சி தொடர்களிலும், திரைப்படங்களிலும் நடித்து வருபவர் பிர்லா போஸ். இவர் சமீபத்தில், வீடு விஷயத்தில் சிலரிடம் தான் ஏமாற்றப்பட்டது தொடர்பாக கூறியிருந்தார். மேலும், அவர் போலீசில் புகாரும் அளித்திருந்தார்.
அதாவது, பிர்லா போஸ் தற்போது குடியிருக்கும் வீட்டை, சிலர் தங்களது சொந்த வீடு என்று கூறி, பணம் பறித்திருக்கிறார்கள். ஆனால், தற்போது வங்கியில் இருந்து வீட்டை காலி செய்ய சொல்வதால், தன்னிடம் பணம் பறித்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கூறி, நடிகர் பிர்லா போஸ் போலீசில் புகார் அளித்துள்ளார். ஜெயலலிதா முதல்வராக இருந்தபோதே, இது தொடர்பாக தான் புகார் கொடுத்ததாகவும், ஆனால், அது குறித்து எந்த நடவடிக்கையும் போலீசார் எடுக்கவில்லை என்றும் கூறியிருந்தார்.
இந்த நிலையில், ”தான் தற்கொலை செய்துக் கொண்டேன் என தகவல் வந்தால் நம்பாதீர்கள், அது கொலையாக தான் இருக்கும்.” என்று நடிகர் பிர்லா போஸ் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2026-ம் ஆண்டின் மிகப் பெரிய எதிர்பார்ப்பு மிக்க படங்களுல் ஒன்றாகக் கருதப்படும், ராக்கிங் ஸ்டார் யாஷ் நடிக்கும் ‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்’ (Toxic: A Fairytale for Grown-ups), திரைப்படத்தில், கியாரா அத்வானி (Kiara Advani) ஏற்றுள்ள ‘நாடியா’ (Nadia) கதாபாத்திரத்தின் முதல் பார்வை போஸ்டரை படக்குழு அதிகாரபூர்வமாக சமீபத்தில் வெளியிட்டது...
உலகம் முழுவதும் உள்ள படைப்பாளிகளுக்கு நேரடியாக தயாரிப்பாளர்கள் மற்றும் பார்வையாளர்களை அடையும் வாய்ப்பை உருவாக்கி கொடுக்கும் விதத்தில், ’தி ஸ்கிரிப்ட் கிராஃப்ட் இன்டர்நேஷனல்’ (The Script Craft International Short Film Festival) என்ற தலைப்பில் குறும்பட போட்டி ஒன்று தொடங்கியுள்ளது...
இயக்குநர் பாரதிராஜாவிடம் உதவியாளராக பணியாற்றிய குரு...