டிவி மற்றும் திரைப்பட நடிகர் தாடி பாலாஜிக்கும், அவரது மனைவி நித்யாவுக்கும் கடந்த ஆண்டு பிரச்சினை ஏற்பட்டு இருவரும் பிரிந்து வாழ்ந்தார்கள். இருவரும் ஒருவரை ஒருவர் மாற்றி புகார் கூறியதோடு, காவல் நிலையத்திலும் புகார் அளித்தார்கள்.
இதற்கிடையே, பிக் பாஸ் சீசன் 2 வில் பங்கேற்ற தாடி பாலாஜி மற்றும் நித்யா அந்த நிகழ்ச்சியின் மூலம் இணைந்தார்கள். பிறகு இருவரும் சேர்ந்து வாழ தொடங்கிய நிலையில், தற்போது தாடி பாலாஜி தன்னை அடித்து கொடுமை படுத்துவதாக நித்யா காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார்.
இது குறித்து கூறிய நித்யா, சேர்ந்து வாழ தொடங்கிய சில நாட்கள் கழித்து மீண்டும் கணவர் குடித்துவிட்டு அடிப்பது, என்னையும் என் மகளையும் துன்புறுத்துவது, ரவுடிகள் மற்றும் அவரின் நண்பர்களை வீட்டிற்கு வரவழைத்து ஆபாச வார்த்தைகளில் என்னை திட்டுவது போன்ற செயல்களில் ஈடுபட்டார்.
என்னை பற்றி தவறாக அவரும் அவர் நண்பர்களும் வாட்ஸ்அப்பில் பதிவு செய்து அவமானப்படுத்துகின்றனர், என்று தெரிவித்திருக்கிறார்.
90களின் இறுதியில் மற்றும் 2000களின் தொடக்கத்தில் தனது மென்மையான நடிப்பால் ரசிகர்களை வசீகரித்த நடிகர் அபாஸ், பத்தாண்டுகளுக்குப் பிறகு தமிழ் சினிமாவிற்கு திரும்பி வருகிறார்...
புரட்சிக் கலைஞர் கேப்டன் விஜயகாந்த் நடிப்பில் அவரது 100வது படமாக வெளியாகி மிகப்பெரிய வெற்றியையும் வசூல் சாதனையையும் செய்த படம் ‘கேப்டன் பிரபாகரன்’...
விஜய் ஆண்டனி நடிப்பில், அருண் பிரபு இயக்கத்தில், ஷெல்லி காலிஸ்ட் ஒளிப்பதிவில், பாத்திமா விஜய் ஆண்டனி கம்பெனி, விஜய் ஆண்டனி பிலிம் கார்பரேஷன் நிறுவனம் சார்பாக மீரா விஜய் ஆண்டனி வழங்கும் படம் “சக்தித் திருமகன்”...