தமிழ் சினிமா உள்ளிட்ட இந்திய சினிமா முழுவதும் கடந்த ஆண்டு மீ டூ விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. அதிலும் தமிழ் சினிமாவில் பாடகி சின்மயி, வைரமுத்து மீது கூறிய பாலியல் புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதேபோல், தெலுங்கு சினிமாவில் ஸ்ரீரெட்டி பல பிரபலங்கள் மீது வெளிப்படையாக பாலியல் புகார் கூறினார்.
இப்படி தமிழ், தெலுங்கு, மலையாளம் என்று பல மொழி சினிமாக்களிலும் மீ டூ புகாரால் பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், மலையாள சினிமாவை சேர்ந்த இளம் நடிகையான திவ்யா, 60 வயது நடிகரான அலான்சியர் லே தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் கூறியதோடு, அவர் தன்னிடம் பொது வெளியில் மன்னிப்பு கேட்க வேண்டும், என்றும் கூறியிருந்தார்.
ஆனால், நடிகையின் கோரிக்கையை நிராகரித்த நடிகர் அலான்சியர் லே, அவரது புகார் குறித்தும் மழுப்பலான பதில் அளித்தார். இந்த விவகாரத்தை தொடர்ந்து நடிகர் அலான்சியர் லேவுக்கு பட வாய்ப்புகள் குறைந்து விட்டது.
இந்த நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றின் மூலம் நடிகை திவ்யாவிடம் நடிகர் அலான்சியர் லே மன்னிப்பு கேட்டதுடன், மேலும் சிலரிடம் பாலியல் விவகாரம் தொடர்பாக மன்னிப்பு கேட்டுள்ளார்.
90களின் இறுதியில் மற்றும் 2000களின் தொடக்கத்தில் தனது மென்மையான நடிப்பால் ரசிகர்களை வசீகரித்த நடிகர் அபாஸ், பத்தாண்டுகளுக்குப் பிறகு தமிழ் சினிமாவிற்கு திரும்பி வருகிறார்...
புரட்சிக் கலைஞர் கேப்டன் விஜயகாந்த் நடிப்பில் அவரது 100வது படமாக வெளியாகி மிகப்பெரிய வெற்றியையும் வசூல் சாதனையையும் செய்த படம் ‘கேப்டன் பிரபாகரன்’...
விஜய் ஆண்டனி நடிப்பில், அருண் பிரபு இயக்கத்தில், ஷெல்லி காலிஸ்ட் ஒளிப்பதிவில், பாத்திமா விஜய் ஆண்டனி கம்பெனி, விஜய் ஆண்டனி பிலிம் கார்பரேஷன் நிறுவனம் சார்பாக மீரா விஜய் ஆண்டனி வழங்கும் படம் “சக்தித் திருமகன்”...