தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் என்பதை காட்டிலும், தமிழ் சினிமாவின் கிசிகிசு மன்னர் என்று சொல்லும் அளவுக்கு ஆர்யா குறித்து பல கிசுகிசுக்குள் பரவிக் கொண்டிருந்த நிலையில், அவர் திடீரென்று சாயீஷாவை திருமணம் செய்ய இருப்பதாக அறிவித்தது பலருக்கு அதிர்ச்சியாக தான் இருந்தது. ஏன், சாயீஷாவின் பெற்றோருக்கும் இதில் அதிர்ச்சி தானாம்.
‘கஜினிகாந்த்’ படத்தில் தன்னுடன் நடித்த சாயீஷாவை ஆர்யா காதலித்து கரம் பிடிக்க இருந்தாலும், இது காதல் திருமணம் அல்ல என்று சாயீஷாவின் தாயார் பேட்டி அளித்து பரபரப்பை ஏற்படுத்தினார். காரணம், அவருக்கு இந்த திருமணத்தில் சம்மதம் இல்லையாம், பிறகு சாயீஷாவின் பிடிவாதத்தினாலும், ஆர்யா இஸ்லாமியர் என்பதாலும் தான் அவர் ஒப்புக் கொண்டாராம்.
மார்ச் மாதம் 10 ஆம் தேதி ஆர்யாவின் திருமணம் நடைபெற உள்ள நிலையில், அவரது திருமணத்திற்கு வெறும் 100 அழைப்பிதழ்கள் மட்டுமே அச்சடிக்கப்பட்டிருக்கிறதாம். அதேபோல், சினிமா துறையில் வெறும் 10 பேருக்கு மட்டுமே அழைப்பு விடுத்துள்ளார்களாம்.
சினிமா உலகமே ஆர்யாவின் திருமணம் குறித்து எதிர்பார்த்துக் கொண்டிருக்க அவரோ, வெறும் 10 பேருக்கு மட்டுமே அழைப்பு விடுத்திருப்பது அனைவரும்ம் அதிச்சியளித்திருக்கிறது. தன்னுடன் சேர்த்து கிச்கிசுக்கப்பட்ட நடிகைகளின் எண்ணிக்கையே பத்தை தாண்டும் நிலையில், தனது திருமணத்திற்கு வெறும் 10 பேரை மட்டும் ஆர்யா அழைப்பதன் மர்மம் என்னவாக இருக்கும், என்று கோடம்பாக்கத்தில் பேசி வருகிறார்கள்.
பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்க, அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா நடிப்பில் வெளியான 'தாய் கிழவி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது...
வ்யோம் என்டர்டெயின்மென்ட்ஸ் (Vyom Entertainments) நிறுவனம் சார்பில் விஜயா சதிஷ் மற்றும் ஆர்...
மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்க, மிகப்பெரிய படைப்பாக உருவாகி வரும் ’பேட்ரியாட்' திரைப்படத்தில் நடிகை நயன்தாரா நடித்துள்ள கதாபாத்திரத்தின் சிறப்பு போஸ்டர் பெண்கள் தினத்தை முன்னிட்டு நேற்று முன் தினம் வெளியிடப்பட்டுள்ளது...