இயக்குநராக வேண்டும் என்று கோடம்பாக்கத்திற்குள் நுழைந்த அருண்ராஜா காமராஜ், நடிகராகவும், பாடலாசிரியராகவும் பிஸியானாலும், மறுபுரம் படம் இயக்குவதிலும் தீவிரம் காட்டி வந்தார். அதன்படி, தனது முதல் படம் குறித்து சமீபத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்ட அருண்ராஜா காமராஜ், படம் இயக்குவதற்கு முன்பாக அனைவரின் கவனத்தையும் ஈர்த்த இயக்குநராகிவிட்டார்.
இதுவரை இந்திய சினிமாவில் யாரும் சொல்லாத பெண்கள் கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து படம் இயக்க உள்ள அருண்ராஜா காமராஜ், அப்படத்திற்கான நடிகைகள் தேர்வில் ஈடுபட்டுள்ளார். கிரிக்கெட் விளையாட தெரிந்த நடிக்க ஆர்வமுள்ள பெண்கள் ஆடிசனில் கலந்துக்கொள்ளலாம் என்று அறிவித்திருந்தார்.
இந்த நிலையில், இந்திய கிரிக்கெட் அணிக்கு விளையாடு வருபவரும், பயிற்சியாளருமான தேவிகா பஃல்ஷிகார், இப்படத்திற்கு தனது ஆதரவை தெரிவித்ததுடன், தன்னால் முடிந்த அனைத்து உதவியையும் செய்ய தான் தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார். தேவிகாவின் இந்த ஸ்டேட்மெண்டால் அருணராஜா காமராஜ் இயக்கும் படம் குறித்து தற்போது இந்திய அளவில் பேசப்பட்டு வருகிறது.
இது குறித்து அருணாராஜா காமராஜியிடம் கேட்டதற்கு, “தேவிகாவின் இந்த அறிவிப்பு தனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. அவரது உதவியை சந்தோஷமாக ஏற்றுக் கொள்கிறேன். இப்படத்தின் தரத்திற்கும், விளம்பரத்திற்கும் இது மிகவும் உதவியாக இருக்கும். இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியை சேர்ந்த யாரேனும் இப்படத்தில் நடிக்க விரும்பினால் தான் அதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்வேன்.” என்று தெரிவித்தார்.
இயக்குநர் ஷெரீஃப் தனது முதல் படமான ‘ரணம் அறம் தவறேல்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, இதயபூர்வமாக கற்பனை செய்த கதையை, தயாரிப்பாளர் ஜெய் கிரண் (ஆதிமூலம் கிரியேஷன்ஸ்) உறுதியுடன் கையில் எடுத்ததின் விளைவாக உருவானது ‘காந்தி கண்ணாடி’...
விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன்ஸ் தயாரிப்பில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கும் சக்தி திருமகன் படத்தின் முன் வெளியீட்டு விழா 10...
’டார்லிங் - 2’(2016) ஹாரர் காமெடி படத்தையும், ’விதிமதி உல்டா’ (2017) திரில்லர் படத்தையும் தயாரித்து கதாநாயகனாகவும் நடித்து தமிழ்த் திரையுலகிற்கு புதிய கதாநாயகனாகவும், தயாரிப்பாளராகவும் அறிமுகமானவர் ரமீஸ் ராஜா...