இயக்குநராக வேண்டும் என்று கோடம்பாக்கத்திற்குள் நுழைந்த அருண்ராஜா காமராஜ், நடிகராகவும், பாடலாசிரியராகவும் பிஸியானாலும், மறுபுரம் படம் இயக்குவதிலும் தீவிரம் காட்டி வந்தார். அதன்படி, தனது முதல் படம் குறித்து சமீபத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்ட அருண்ராஜா காமராஜ், படம் இயக்குவதற்கு முன்பாக அனைவரின் கவனத்தையும் ஈர்த்த இயக்குநராகிவிட்டார்.
இதுவரை இந்திய சினிமாவில் யாரும் சொல்லாத பெண்கள் கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து படம் இயக்க உள்ள அருண்ராஜா காமராஜ், அப்படத்திற்கான நடிகைகள் தேர்வில் ஈடுபட்டுள்ளார். கிரிக்கெட் விளையாட தெரிந்த நடிக்க ஆர்வமுள்ள பெண்கள் ஆடிசனில் கலந்துக்கொள்ளலாம் என்று அறிவித்திருந்தார்.
இந்த நிலையில், இந்திய கிரிக்கெட் அணிக்கு விளையாடு வருபவரும், பயிற்சியாளருமான தேவிகா பஃல்ஷிகார், இப்படத்திற்கு தனது ஆதரவை தெரிவித்ததுடன், தன்னால் முடிந்த அனைத்து உதவியையும் செய்ய தான் தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார். தேவிகாவின் இந்த ஸ்டேட்மெண்டால் அருணராஜா காமராஜ் இயக்கும் படம் குறித்து தற்போது இந்திய அளவில் பேசப்பட்டு வருகிறது.
இது குறித்து அருணாராஜா காமராஜியிடம் கேட்டதற்கு, “தேவிகாவின் இந்த அறிவிப்பு தனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. அவரது உதவியை சந்தோஷமாக ஏற்றுக் கொள்கிறேன். இப்படத்தின் தரத்திற்கும், விளம்பரத்திற்கும் இது மிகவும் உதவியாக இருக்கும். இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியை சேர்ந்த யாரேனும் இப்படத்தில் நடிக்க விரும்பினால் தான் அதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்வேன்.” என்று தெரிவித்தார்.
தன்வீர் தயானந்த யோகி ஜெயந்தி விழா ஜூலை 2 ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில், இவ்விழாவை முன்னிட்டு ’தெய்வீக அற்புதங்களும் மற்றும் ரகசியங்களும்’ என்று சொல்லக்கூடிய ‘டிவைன் மிராக்கல் அண்ட் சீக்ரெட்ஸ்’ (Divine Miracles and Secrets - Part 2) என்ற புத்தகத்தின் இரண்டாம் பாகம் வெளியிடப்பட்டது...
எஸ்பிஏ புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் உருவாகி இருக்கும் படம் ’மகேஸ்வரன் மகிமை’...
நடிகர் விஜய் நடித்து மிகப்பெரிய வெற்றிபெற்ற ‘துள்ளாத மனமும் துள்ளும்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான இயக்குநர் எழில், திரையுலகில் தனது 25 வருடத்தில் அடியெடுத்து வைத்துள்ளார்...