தெலுங்கு சினிமா பிரபலங்கள் மீது பாலியல் புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்திய ஸ்ரீரெட்டி, தமிழ் சினிமாவை சேர்ந்த பிரபலங்கள் பலர் மீதும் அதே புகார்களை கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார். பிறகு அவர் புகார் கூறியவர்களில் ஒருவரான ராகவா லாரன்ஸ், படத்தில் வாய்ப்பு கொடுத்தார். மேலும் சில தமிழ்ப் படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்ற ஸ்ரீரெட்டி, சில காலம் பாலியல் புகார் கூறாமல் இருந்தார்.
இதற்கிடையே, கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரபல தெலுங்கு இயக்குநர் கொரட்டல சிவா ”காமசூஸ்த்ராவின் குரு” என்று கூறியதோடு, முகம் தெரியாத ஆணும், பெண்ணும் அறைகுறை ஆடையில் நெருகமாக இருக்கும் புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டார்.
இந்த நிலையில், தெலுங்கு சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான நானி மீது ஸ்ரீரெட்டி பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.
இது குறித்து கூறிய ஸ்ரீரெட்டி, ”நானி திருமணம் ஆகாமல் இருந்த போது என்னுடன் பாலியல் தொடர்பு வைத்திருந்தார். வாய்ப்பு தருவதாக கூறி என்னுடன் செக்ஸ் வைத்துக்கொள்வார். என் கேரியருக்கு உதவுவார் என நினைத்தேன், ஆனால் நடக்கவில்லை. மது, புகை, பெண் என அனைத்து பழக்கமும் அவருக்கு உண்டு. ஒருமுறை மது பாட்டில்களுடன் என் வீட்டுக்கு வந்தார். நான் அவரை எச்சரித்து அனுப்பினேன்.” என்று தெரிவித்துள்ளார்.
தற்போது சென்னையில் முகாமிட்டுள்ள ஸ்ரீரெட்டி, மீண்டும் தெலுங்கு சினிமா பிரபலங்கள் மீது பாலியல் புகார் கூற தொடங்கியிருப்பது தெலுங்கு சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
90களின் இறுதியில் மற்றும் 2000களின் தொடக்கத்தில் தனது மென்மையான நடிப்பால் ரசிகர்களை வசீகரித்த நடிகர் அபாஸ், பத்தாண்டுகளுக்குப் பிறகு தமிழ் சினிமாவிற்கு திரும்பி வருகிறார்...
புரட்சிக் கலைஞர் கேப்டன் விஜயகாந்த் நடிப்பில் அவரது 100வது படமாக வெளியாகி மிகப்பெரிய வெற்றியையும் வசூல் சாதனையையும் செய்த படம் ‘கேப்டன் பிரபாகரன்’...
விஜய் ஆண்டனி நடிப்பில், அருண் பிரபு இயக்கத்தில், ஷெல்லி காலிஸ்ட் ஒளிப்பதிவில், பாத்திமா விஜய் ஆண்டனி கம்பெனி, விஜய் ஆண்டனி பிலிம் கார்பரேஷன் நிறுவனம் சார்பாக மீரா விஜய் ஆண்டனி வழங்கும் படம் “சக்தித் திருமகன்”...