Latest News :

விரைவில் வெளியாகும் ‘என்னோடு நீ இருந்தால்’
Monday September-04 2017

சைட்டோ பிலிம் கார்ப்பரேசன் எஸ்.யசோதா தயாரிக்கும் படம் ‘என்னோடு நீ இருந்தால்’. மு.ரா.சத்யா ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் ஹீரோயினாக மானசா நாயர் நடிக்கிறார். வெண்ணிற ஆடை மூர்த்தி, ரோகினி, அஜய் ரத்னம், வையாபுரி, பிளாக் பாண்டி, அழகு, மீரா கிருஷ்ணன், சஞ்சய், சாந்தி ஆனந்தராஜ், பயில்வான் ரங்கநாதன், நெல்லை சிவா ஆகியோர் நடிக்கிறார்கள்.

 

நாக.சரவணன் ஒளிப்பதிவு செய்யும் ப்படத்திற்உ கே.கே. இசையமைக்க, ராஜ்கீர்த்தி எடிட்டிங் செய்கிறார். எஸ்.சுப்பிரமணி கலையை நிர்மாணிக்க, கேசவன் நடனம் அமைக்கிறார். ஸ்டண்ட் ஜி ஆக்‌ஷனை வடிவமைக்க, எஸ்.ஆனந்த் தயாரிப்பு மேற்பார்வையை கவனிக்கிறார்.

 

இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி இயக்கி ஹீரோவாக நடிக்கும் மு.ரா.சத்யா படம் குறித்து கூறுகையில், “கிஷோர் ( மு.ரா.சத்யா) ஒரு அலுவலகத்தில் வேலை செய்கிறான். ஒரு பணக்காரபெண்ணான பூஜா(மானஸா நாயர்) வை சந்திக்கிறான். அவர்களுக்குள் காதல் மலர்கிறது. திடீரென்று அவள் கானாமல் போகிறாள். அவளை பல இடங்களிலும் தேடுகிறான். அப்போது அவனுக்கு திகில் சம்பங்கள் பல  நிகழ்கிறது. அந்த திகில் சம்பவங்களைக் கடந்து பூஜாவை கண்டுபிடித்தானா இல்லையா என்பது தான் படத்தின் திரைக்கதை. திகிலுடன் காதலையும் கலந்து சொல்லி இருக்கிறோம். பாடல்கள் அத்தனையும் சூப்பர் ஹிட் ஆகி இருக்கிறது.  விரைவில் படம் வெளியாக உள்ளது.” என்றார்.

Related News

430

‘டியர் ரதி’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு!
Sunday December-14 2025

'இறுதிப் பக்கம்' திரைப்படத்தைத் தயாரித்த  இன்சாம்னியாக்ஸ் ட்ரீம்  கிரியேஷன்ஸ் எல்...

சென்னை சர்வதேச திரைப்பட விழாவுக்கு ரூ.95 லட்சம் நிதி வழங்கிய தமிழக அரசு!
Friday December-12 2025

தமிழக அரசு மற்றும் NFDC ஆதரவுடன் இந்தோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன் (ICAF) நடத்தும் 23-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா தொடங்கியது...

தி.மு.க வில் இணைந்தார் ‘புலி’ பட தயாரிப்பாளர் பி.டி.செல்வகுமார்!
Thursday December-11 2025

திரைப்பட தயாரிப்பாளரும், விஜயின் முன்னாள் மேலாளர் மற்றும் ‘கலப்பை மக்கள் இயக்கம்’ நிறுவனர் பி...

Recent Gallery