தமிழ் பேசும் நாயகியான ப்ரியா ஆனந்த், சில படங்களில் ஹீரோயினாக நடித்தாலும் அவருக்கு பெரிய வெற்றி என்று எதுவும் அமையவில்லை. இதற்கிடையே சிவகார்த்திகேயனுடன் அவர் நடித்த ‘எதிர் நீச்சல்’ வெற்றி பெற்றதை தொடர்ந்து பல வாய்ப்புகள் கிடைத்தது. இருந்தாலும், அப்படங்கள் அனைத்தும் தோல்விப் படங்களாகவே அமைந்தது.
இதற்கிடையே, ஒரு சில தமிழ்ப் படங்களில் நடித்து வந்த ப்ரியா ஆனந்த், திரீரென்று மாயமானார். அவருக்கு தமிழ்ப் பட வாய்ப்புகளை குறைந்த நிலையில், தெலுங்கு மற்றும் மலையாளப் படங்களில் நடித்து வந்தவர், தற்போது ஆர்.ஜே.பாலாஜியுடன் ‘எல்.கே.ஜி’ படத்தில் நடித்திருந்தார். ஆனால், அப்படத்தில் அவரது வேடம் பெரிதாக எடுபடவில்லை.
தற்போது விக்ரம் மகன் துருவ் ஹீரோவாக நடிக்கும் ஆதித்ய வர்மா படத்தில் நடித்து வரும் ப்ரியா ஆனந்த், தனக்கு பட வாய்ப்புகள் குறைந்ததற்கான காரணத்தை கூறும்போது, ”தமிழில் கவனத்தை குறைத்து மற்ற மொழிகளில் நடிக்க துவங்கினேன். எல்கேஜியில் வித்தியாசமான வேடத்தில் நடித்தேன். அது மிகவும் எனக்கு பிடித்திருந்தது.
அதேபோல் தான் ஆதித்ய வர்மாவிலும். அதனால் இனிமேல் வழக்கமான நாயகியாக இல்லாமல் வித்தியாசமான கதாபாத்திரங்களை தேடிப்பிடித்து நடிக்க போகிறேன்.” என்று தெரிவித்தார்.
பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்க, அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா நடிப்பில் வெளியான 'தாய் கிழவி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது...
வ்யோம் என்டர்டெயின்மென்ட்ஸ் (Vyom Entertainments) நிறுவனம் சார்பில் விஜயா சதிஷ் மற்றும் ஆர்...
மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்க, மிகப்பெரிய படைப்பாக உருவாகி வரும் ’பேட்ரியாட்' திரைப்படத்தில் நடிகை நயன்தாரா நடித்துள்ள கதாபாத்திரத்தின் சிறப்பு போஸ்டர் பெண்கள் தினத்தை முன்னிட்டு நேற்று முன் தினம் வெளியிடப்பட்டுள்ளது...