கார்த்தி நடித்த ‘சிறுத்தை’ படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமான சிவா, அதன் பிறகு அஜித்தை வைத்து வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் என தொடர்ந்து நான்கு படங்களை இயக்கினார்.
அஜித்தை வைத்து சிவா இயக்கிய வீரம் மற்றும் வேதாளம் ஓரவு வெற்றியடைந்தாலும், விவேகம் படுதோல்வியடைந்தது. இருப்பினும் அஜித் கொடுத்த மறுவாய்ப்பை சரியாக பயன்படுத்திய சிவா, ‘விஸ்வாசம்’ படத்தின் மூலம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தார். வசூல் ரீதியாக விஸ்வாசம் பல சாதனைகளை புரிந்ததோடு, அஜித் படங்களிலேயே அதிகமான வசூலித்த படம் என்ற பெருமையையும் பெற்றது.
இந்த நிலையில், சிவா அடுத்ததாக எந்த நடிகரை இயக்குவார்? என்ற கேள்விக்கு தற்போது விடை கிடைத்திருக்கிறது.
சிவா அடுடுத்ததாக சூர்யாவை வைத்து படம் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் ஏற்கனவே வெளியானாலும், தற்போது இது உறுதியாகியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தை ஸ்டுடீயோ கிரீன் நிறுவனம் தயாரிக்கிறதாம்.
பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்க, அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா நடிப்பில் வெளியான 'தாய் கிழவி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது...
வ்யோம் என்டர்டெயின்மென்ட்ஸ் (Vyom Entertainments) நிறுவனம் சார்பில் விஜயா சதிஷ் மற்றும் ஆர்...
மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்க, மிகப்பெரிய படைப்பாக உருவாகி வரும் ’பேட்ரியாட்' திரைப்படத்தில் நடிகை நயன்தாரா நடித்துள்ள கதாபாத்திரத்தின் சிறப்பு போஸ்டர் பெண்கள் தினத்தை முன்னிட்டு நேற்று முன் தினம் வெளியிடப்பட்டுள்ளது...