Latest News :

மீ டூ விவகாரத்தில் சிக்கிய பிரபல இயக்குநர் தற்கொலை!
Thursday March-07 2019

நடிகை ஸ்ரீரெட்டி மூலம் தெலுங்கு சினிமாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய மீ டூ விவகாரம், தமிழகத்திலும் தாண்டவமாடியது. ஸ்ரீரெட்டியை தொடர்ந்து பாடகி சின்மயி மீ டூ விவகாரத்தை கையில் எடுக்க, தமிழ் சினிமாவிலும் பெரும் சர்ச்சை வெடித்தது. 

 

 

சின்மயியை தொடர்ந்து பல நடிகைகள் மீ டூ விவகாரம் குறித்து பேச தொடங்கினாலும், தங்களுக்கு அதுபோன்ற அனுபவம் ஏற்படவில்லை, ஆனாலும் சினிமாவில் பாலியல் தொல்லை இருக்க தான் செய்கிறது, என்று கூறி வந்தார்கள். தற்போது மீ டூ விவகாரம் தொடர்பாக நடிகைகள் பேசுவது குறைந்துள்ளது.

 

இந்த நிலையில், மீ டூ விவகாரத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு சிக்கிய பிரபல இயக்குநரான ஆர்க்ய பாஸு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

மீ டூ விவகாரத்தில் சிக்கிய இயக்குநர் ஆர்க்ய பாஸு, கடுமையான மன வருத்தத்தில் இருந்தாராம். குடும்பத்தின் உதவியோடு கவுன்சிலிங் எல்லாம் சென்ற அவர், சகஜ நிலைக்கு திரும்பியதோடு, சினிமாவில் படம் எடிட் செய்வது சின்ன சின்ன வேலைகளை செய்துவந்த நிலையில், மார்ச் 1ம் தேதி தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்.

 

Director Argya Pashu

 

நன்றாக இருந்த இயக்குநர் ஆர்க்ய பாஸு தற்கொலை செய்தது அவரது குடும்பத்தையும், திரையுலகையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.

Related News

4335

ஷேனிடம் நிறைய கற்றுக் கொண்டேன் - நடிகர் சாந்தனு
Saturday September-20 2025

தயாரிப்பாளர் சாந்தோஷ் டி.குருவில்லா மற்றும் தயாரிப்பாளர் பினு ஜார்ஜ் அலெக்சாண்டர் இணைந்து தயாரித்திருக்கும் படம் தான் பல்டி...

நடிகர் ரோபோ சங்கர் மறைவு! - திரையுலகம் அதிர்ச்சி
Thursday September-18 2025

பிரபல திரைப்பட காமெடி நடிகர் ரோபோ சங்கர் உடல் நலக்குறைவால் இன்று உயிரிழந்தார்...

ஜீ5-ன்‘வேடுவன்’ இணையத் தொடர் அக்டோபர் 10 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகிறது
Wednesday September-17 2025

இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ZEE5, தனது அடுத்த அதிரடி தமிழ் ஒரிஜினல் சீரிஸான “வேடுவன்” சீரிஸ், வரும் அக்டோபர் 10 ஆம் முதல் ஸ்ட்ரீமாகவுள்ளதாக அதிகாரப்பூர்வ  அறிவிப்பை வெளியிட்டுள்ளது...

Recent Gallery