தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் மலையாளம் என அனைத்து மொழி சினிமாவிலும் மீ டூ புகார் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது டிவி ஏரியாவிலும் மீ டூ புகார் தலை தூக்க தொடங்கியிருக்கிறது.
இந்தி டிவி சேனலை சேர்ந்த பிரபல சீரியல் நடிகை டீனா தத்தா, தனது நடிக்கும் சக நடிகர் மோஹித் மல்ஹோத்ரா மீது பரபரப்பு பாலியல் புகார் தெரிவித்திருக்கிறார்.
’தாயன்’ என்ற சீரியலில் நடித்து வரும் டீனா தத்தா, நெருக்கமாக நடிக்கும் காட்சியில் நடிகர் மோஹித் மல்ஹோத்ரா, தன்னை கண்ட இடங்களில் தொட்டு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், அவர் திட்டமிட்டே தன்னிடம் சில்மிஷம் செய்வதை அறிந்ததால், இது குறித்து தயாரிப்பாளரிடம் புகார் கொடுத்ததாகவும் தெரிவித்திருக்கிறார்.
ஆனால், இதை மறுத்திருக்கும் மோஹித், டீனா முதலில் தனக்கு தொல்லை எதுவும் நடக்கவில்லை என்று சொன்னார். இப்போது பாலியல் தொல்லை கொடுத்ததாக சொல்லியிருக்கிறார். படப்பிடிப்பில் என்னால் அவருக்கு எதாவது அசவுக்கரியங்கள் ஏற்பட்டிருந்தால், அதை அப்பவே என்னிடம் சொல்லியிருக்கலாமே, இப்போது ஏன் சொல்கிறார், என்று விளக்கம் அளித்திருக்கிறார்.
டீனா தத்தாவின் இந்த பாலியல் புகார் குறித்து சீரியல் குழுவினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்க, அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா நடிப்பில் வெளியான 'தாய் கிழவி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது...
வ்யோம் என்டர்டெயின்மென்ட்ஸ் (Vyom Entertainments) நிறுவனம் சார்பில் விஜயா சதிஷ் மற்றும் ஆர்...
மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்க, மிகப்பெரிய படைப்பாக உருவாகி வரும் ’பேட்ரியாட்' திரைப்படத்தில் நடிகை நயன்தாரா நடித்துள்ள கதாபாத்திரத்தின் சிறப்பு போஸ்டர் பெண்கள் தினத்தை முன்னிட்டு நேற்று முன் தினம் வெளியிடப்பட்டுள்ளது...