நடிகர் தனுஷ் தங்களது மகன் என்றும், அதனால் அவர் தங்களின் பராமரிப்பு செலவுக்கு பணம் வழங்க உத்தரவிட வேண்டும் என்று கோரி, மதுரை மாவட்டம் மேலூரை அடுத்துள்ள எம்.மலம்பட்டியை சேர்ந்த கதிரேசன் - மீனாட்சி தம்பதியினர் மதுரை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
ஆனால், இந்த வழக்கில் உண்மை இல்லை, எனவே வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று தனுஷ் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, தனுஷ் தங்களது மகன் தான் என்பதற்காக ஆதாரத்தை கதிரேசன் - மீனாட்சி தம்பதியினர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். அதேபோல் தனுஷ் தரப்பிலும், ஆதாரம் தாக்கல் செய்யப்பட்டது. மேலும் தனுஷின் அங்க அடையாளங்களையும் நீதிபதிகள் நேரில் பரிசோதித்தனர்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, தனுஷ் கதிரேசன் - மீனாட்சி தம்பதியின் மகன் இல்லை, என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்தது.
இந்த நிலையில், கதிரேசன் - மீனாட்சி தம்பதி மீண்டும் தனுஷுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். அந்த மனுவில், நடிகர் தனுஷ் தாக்கல் செய்த பிறப்பு மற்றும் பள்ளி மாற்றுச் சான்றிதழ்கள் அனைத்தும் போலியானவை என்று தெரிவித்துள்ளனர்.
பத்திரிகையாளர், திரைப்பட மக்கள் தொடர்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர் விஜய்யின் பி ஆர் ஓ'வாக பல வருடங்கள் பணியாற்றி அவரது வளர்ச்சிக்கு துணை நின்றவர், சமூகச் செயற்பாட்டாளர் என பல்வேறு அடையாளங்களுக்குச் சொந்தக்காரரான பி டி செல்வகுமார் நிறுவி நிர்வகிக்கும் சமூக சேவை அமைப்பு கலப்பை மக்கள் இயக்கம்...
அர்ஜுன் ஜன்யா இயக்கத்தில் கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்கள் டாக்டர்...
நவம்பர் 1 மற்றும் 2-ம் தேதிகளில் ராயப்பேட்டையில் உள்ள THE MUSIC ACADEMY-யில் 3-வது ஆண்டாக PROVOKE ART FESTIVAL 2025 கோலாகலமாக நடைபெற்றது...