தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வரும் விமல், மது போதையில் நடிகர் ஒருவரை கடுமையாக தாக்கிய விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரை சேர்ந்த புதுமுக நடிகர் அபிஷேக் என்பவர், விருகம்பாக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். இவர் ‘அவன் அவள் அது’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.
நேற்று அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் அமர்ந்து போனில் பேசிக் கொண்டிருந்த அபிஷேக்கை, நடிகர் விமல் மற்றும் அ4 பேர் சேர்ந்து அடித்திருக்கிறார்கள்.
இதில், நடிகர் அபிஷேக்கின் நெற்றி, கண், கை, கால் உள்ளிட்ட இடங்களில் காயம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அபிஷேக், இது தொடர்பாக விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரில், மது போதையில் இருந்த நடிகர் விமல், அவரது ஆட்களும் என்னை தாக்கினர். அவர்கள் மீது உரிய நடவடிகை எடுக்க வேண்டும், என்று தெரிவித்திருந்தார்.
இதனை தொடர்ந்து, ஆபாசமாக பேசுதல், காயம் ஏற்படுத்துதல் ஆகிய இரண்டு சட்ட பிரிவுகளின் கீழ் விமல் மீது வழக்கு பதிவு செய்திருக்கும் போலீசார், இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க முடிவு செய்திருப்பதோடு, நடிகர் விமலை கைது செய்யும் நடவடிக்கையில் இறங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
சுரஜ் புரொடக்ஷன்ஸ் சார்பில் ரமேஷ் ரெட்டி தயாரிப்பில், டாக்டர்...
60 ஆண்டுகளுக்கும் அதிகமாக இந்தியாவின் மிகவும் நம்பகமான ஆபரண நிறுவனமாக இயங்கி வரும் ஜோஸ் ஆலுக்காஸ், பிரபல நடிகர் துல்கர் சல்மான் தனது பிராண்டின் விளம்பரத் தூதராக இணைந்திருப்பதை பெருமகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளது...
டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் (TKM) மற்றும் DRUM TAO ஆகியவை இரண்டாவது முறையாக சென்னைக்கு மறக்க முடியாத ஆற்றல் மற்றும் தாள கலவையை கொண்டு வந்தன, மக்களின் தேவைக்கேற்ப மீண்டும் வந்தன...