80 களில் தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த ராதிகா, தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி என்று பல மொழிகளில் பல வெற்றிப் படங்களில் நடித்திருக்கிறார். ஹீரோயினாக மட்டும் இன்றி குணச்சித்திர வேடங்களிலும் நடித்து தனது திறமையை வெளிக்காட்டியவர், சின்னத்திரையில் ராணியாக திகழ்கிறார்.
‘சித்தி’ சீரியல் மூலம் நெடுந்தொடர்களுக்கு புதிய பரிணாமத்தை கொடுத்த ராதிகா, தொடர்ந்து அண்ணாமலை, வாணி ராணி, செல்வி உள்ளிட்ட பல சீரியல்களில் கதாநாயகியாக நடித்ததோடு, சின்ன பாப்பா பெரிய பாப்பா, சிவமயம், ருத்ரவீணை போன்ற காமெடி மற்றும் பேண்டசி தொடர்களை தயாரித்தும் இருக்கிறார்.
தற்போது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘சந்திரகுமாரி’ தொடரில் நடித்து வரும் ராதிகா, மொத்தமாக 6,850 எப்பிசோடுகள் கதாநாயகியாக நடித்துள்ளார். இத்தனை எப்பிசோடுகள் நடித்த ஒரே நடிகை இவர் தானாம். அதாவது மொத்தமாக 3,430 மணி நேரம் சின்னத்திரையில் நடித்திருக்கிறாராம்.
இத்தகைய பெருமையை பெற்றிருக்கும் ராதிகா, திடீரென்று நடிப்புக்கு பிரேக் போட்டுள்ளார். ஆம், அடுத்த இரண்டு மாதங்களுக்கு எந்த தொடரிலும் நடிக்காமல் பிரேக் எடுக்க முடிவு செய்திருப்பவர், பிறகு ஜூன் மாதத்தில் இருந்து புதிய பரிமாணத்தில் நடிக்க இருக்கிறாராம்.
அநேகமாக கதாபாத்திரத்திற்காக உடல் எடையை குறைப்பதற்காகவே ராதிகா, இரண்டு மாதங்கள் பிரேக் எடுப்பதாக கூறப்படுகிறது.
சிவகார்த்திகேயன் புரொடக்சன்ஸ் வழங்கும் இயக்குநர் ராஜவேல் இயக்கத்தில் நடிகர்கள் தர்ஷன், காளி வெங்கட், ஆர்ஷா பைஜூ உள்ளிட்டப் பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'ஹவுஸ் மேட்ஸ்'...
18 கிரியேட்டர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சசிகலா பிரபாகரன் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் பாலாஜி செல்வராஜ் இயக்கத்தில், நடிகர் சரவணன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிக்க, நீதிமன்ற வழக்கின் பின்னணியில், அசத்தலான இணையத் தொடராக ZEE5-ல் 2025 ஜூலை 18 ஆம் தேதி வெளியான ‘சட்டமும் நீதியும்’ தொடர், ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று, வெற்றியடைந்துள்ளது...
தமிழரசன் தியேட்டர் தயாரிப்பில், தமிழ்மாமணி துரை பாலசுந்தரம் இயக்கத்தில், தமிழில் 35 வருடங்களுக்குப் பிறகு புராணக்கதையை மையமாக வைத்து உருவாகியுள்ள படம் ’ராகு கேது’...