பிக் பாஸ் சீசன் 2-வின் ரன்னரான ஐஸ்வர்யா தத்தா தனது பாய் பிரெண்ட் என்று சொல்வதோடு அவரது பெயரை கையில் பச்சை குத்திக் கொண்டு இருந்த கோபி என்ற கோபி கிருஷ்ணன் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
போலி நிறுவனங்கள் நடத்தியது, வங்கியில் கடன் பெற்று தருவதாக கூறி மக்களை ஏமாற்றியது என்று பல்வேறு மோசடி வழக்குகள் கோபி கிருஷ்ணன் மீது பதிவு செய்யப்பட்டிருப்பதோடு, அவருடன் தொடர்பில் இருப்பவர்கள் அனைவரையும் கைது செய்ய இருப்பதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
மேலும், கோபி கிருஷ்ணனின் நிறுவனங்களில் ஐஸ்வர்யா தத்தாவுக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படுவதோடு, பிக் பாஸ் மூலம் அவருக்கு கிடைத்த பப்ளிசிட்டியை வைத்து வெளிநாடுகளில் கலை நிகழ்ச்சிகள் நடத்தி கல்லா கட்ட கோபி கிருஷ்ணா திட்டமிட்டிருந்தாராம். அப்படி ஒரு வெளிநாட்டு கலை நிகழ்ச்சியில் பங்கேற்று திரும்பிய போது தான் அவரை சென்னை விமான நிலையத்தில் வைத்து போலீஸ் கைது செய்திருக்கிறது. அப்போது அவருடன் ஐஸ்வர்யா தத்தாவும் உடன் இருந்துள்ளார்.
இது தொடர்பாக கடந்த ஆண்டே விகடன் இணையதளத்தில் கட்டுரை வெளியான நிலையில், தற்போது கோபி கிருஷ்ணா கைது செய்யப்பட்டிருப்பதால், அவரை தொடர்ந்து ஐஸ்வர்யா தத்தாவும் கைது செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.
ஆனால், தனக்கும் கோபி கிருஷ்ணன் என்பவருக்கும் எந்த தொடர்பும் இல்லை, என்று ஐஸ்வர்யா தத்தா கூறுவதோடு, இது குறித்து பேசுவதற்கும் மறுப்பு தெரிவித்து வருகிறார்.
பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்க, அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா நடிப்பில் வெளியான 'தாய் கிழவி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது...
வ்யோம் என்டர்டெயின்மென்ட்ஸ் (Vyom Entertainments) நிறுவனம் சார்பில் விஜயா சதிஷ் மற்றும் ஆர்...
மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்க, மிகப்பெரிய படைப்பாக உருவாகி வரும் ’பேட்ரியாட்' திரைப்படத்தில் நடிகை நயன்தாரா நடித்துள்ள கதாபாத்திரத்தின் சிறப்பு போஸ்டர் பெண்கள் தினத்தை முன்னிட்டு நேற்று முன் தினம் வெளியிடப்பட்டுள்ளது...