பிக் பாஸ் சீசன் 2-வின் ரன்னரான ஐஸ்வர்யா தத்தா தனது பாய் பிரெண்ட் என்று சொல்வதோடு அவரது பெயரை கையில் பச்சை குத்திக் கொண்டு இருந்த கோபி என்ற கோபி கிருஷ்ணன் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
போலி நிறுவனங்கள் நடத்தியது, வங்கியில் கடன் பெற்று தருவதாக கூறி மக்களை ஏமாற்றியது என்று பல்வேறு மோசடி வழக்குகள் கோபி கிருஷ்ணன் மீது பதிவு செய்யப்பட்டிருப்பதோடு, அவருடன் தொடர்பில் இருப்பவர்கள் அனைவரையும் கைது செய்ய இருப்பதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
மேலும், கோபி கிருஷ்ணனின் நிறுவனங்களில் ஐஸ்வர்யா தத்தாவுக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படுவதோடு, பிக் பாஸ் மூலம் அவருக்கு கிடைத்த பப்ளிசிட்டியை வைத்து வெளிநாடுகளில் கலை நிகழ்ச்சிகள் நடத்தி கல்லா கட்ட கோபி கிருஷ்ணா திட்டமிட்டிருந்தாராம். அப்படி ஒரு வெளிநாட்டு கலை நிகழ்ச்சியில் பங்கேற்று திரும்பிய போது தான் அவரை சென்னை விமான நிலையத்தில் வைத்து போலீஸ் கைது செய்திருக்கிறது. அப்போது அவருடன் ஐஸ்வர்யா தத்தாவும் உடன் இருந்துள்ளார்.
இது தொடர்பாக கடந்த ஆண்டே விகடன் இணையதளத்தில் கட்டுரை வெளியான நிலையில், தற்போது கோபி கிருஷ்ணா கைது செய்யப்பட்டிருப்பதால், அவரை தொடர்ந்து ஐஸ்வர்யா தத்தாவும் கைது செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.
ஆனால், தனக்கும் கோபி கிருஷ்ணன் என்பவருக்கும் எந்த தொடர்பும் இல்லை, என்று ஐஸ்வர்யா தத்தா கூறுவதோடு, இது குறித்து பேசுவதற்கும் மறுப்பு தெரிவித்து வருகிறார்.
சிவகார்த்திகேயன் புரொடக்சன்ஸ் வழங்கும் இயக்குநர் ராஜவேல் இயக்கத்தில் நடிகர்கள் தர்ஷன், காளி வெங்கட், ஆர்ஷா பைஜூ உள்ளிட்டப் பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'ஹவுஸ் மேட்ஸ்'...
18 கிரியேட்டர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சசிகலா பிரபாகரன் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் பாலாஜி செல்வராஜ் இயக்கத்தில், நடிகர் சரவணன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிக்க, நீதிமன்ற வழக்கின் பின்னணியில், அசத்தலான இணையத் தொடராக ZEE5-ல் 2025 ஜூலை 18 ஆம் தேதி வெளியான ‘சட்டமும் நீதியும்’ தொடர், ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று, வெற்றியடைந்துள்ளது...
தமிழரசன் தியேட்டர் தயாரிப்பில், தமிழ்மாமணி துரை பாலசுந்தரம் இயக்கத்தில், தமிழில் 35 வருடங்களுக்குப் பிறகு புராணக்கதையை மையமாக வைத்து உருவாகியுள்ள படம் ’ராகு கேது’...