சினிமா நடிகர்களும், நடிகைகளும் சர்ச்சையில் சிக்குவது அடிக்கடி நிகழும் சம்பவங்கள் தான் என்றாலும், தற்போது தெலுங்கு சினிமாவில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் தொழிலதிபர் சிக்ருபதி ஜெயராம் படுகொலையில் பிரபல நடிகையும், நடிகரும் சிக்கியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கோஸ்டல் பேங்க், எக்ஸ்பிரஸ் டிவி ஆகியவற்றின் இயக்குநராக இருக்கும் சிக்ருபதி ஜெயராம், கடந்த ஜனவரி 31 ஆம் தேதி விஜயவாடா அருகில் தேசிய நெடுஞ்சாலையில் காரில் வைத்து கொலை செய்யப்பட்டார்.
இந்த கொலை சம்பவம் குறித்து விசாரணை நடத்திய காவல் துறை, தற்போது தெலுங்கு சினிமாத் துறையை சேர்ந்த மூன்று பேரை கைது செய்துள்ளது.
ஏற்கனவே, இவ்வழக்கின் முக்கிய குற்றவாளியாக ராகேஷ் ரெட்டி என்பவர் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது இளம் காமெடி நடிகர் சூர்யா பிரசாத், அவரின் உதவியாளர் கிஷோர் மற்றும் அஞ்சி ரெட்டி என்ற நடிகையும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தொழிலதிபர் படுகொலையில் நடிகர், நடிகை சம்மந்தப்பட்டிருப்பதும், அவர்கள் கைதாகியிருப்பதும் தெலுங்கு சினிமாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிவகார்த்திகேயன் புரொடக்சன்ஸ் வழங்கும் இயக்குநர் ராஜவேல் இயக்கத்தில் நடிகர்கள் தர்ஷன், காளி வெங்கட், ஆர்ஷா பைஜூ உள்ளிட்டப் பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'ஹவுஸ் மேட்ஸ்'...
18 கிரியேட்டர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சசிகலா பிரபாகரன் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் பாலாஜி செல்வராஜ் இயக்கத்தில், நடிகர் சரவணன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிக்க, நீதிமன்ற வழக்கின் பின்னணியில், அசத்தலான இணையத் தொடராக ZEE5-ல் 2025 ஜூலை 18 ஆம் தேதி வெளியான ‘சட்டமும் நீதியும்’ தொடர், ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று, வெற்றியடைந்துள்ளது...
தமிழரசன் தியேட்டர் தயாரிப்பில், தமிழ்மாமணி துரை பாலசுந்தரம் இயக்கத்தில், தமிழில் 35 வருடங்களுக்குப் பிறகு புராணக்கதையை மையமாக வைத்து உருவாகியுள்ள படம் ’ராகு கேது’...