Latest News :

சினிமாவின் கசப்பான உண்மைகளை சொல்ல வரும் ‘அனிதா பத்மா பிருந்தா’!
Friday March-15 2019

பல ரகசிங்கள் புதைந்து கிடக்கும் சினிமாவைப் பற்றி சிலர் கூறும் உண்மைகளால் அவ்வபோது சில சர்ச்சைகள் உருவாகி வருகிறது. அந்த வகையில், நாவல் ஒன்றின் மூலம் தமிழ் சினிமாவில் புதிய சர்ச்சை ஒன்று விரைவில் உருவாக இருக்கிறது.

 

சினிமாத்துறையோடு மிக நெருக்கமான தொடர்பில் இருக்கும் ஏ.எல்.சூர்யா என்ற இளைஞர் எழுதியிருக்கும் ’அனிதா பத்மா பிருந்தா’ என்ற இந்த நாவல் தற்போது தமிழ் சினிமாவில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில், இந்த நாவலின் மூலம் விரைவில் பல கசப்பான உண்மைகள் வெளியாவதோடு, பல்வேறு சர்ச்சைகளும் உருவாக உள்ளது.

 

560 பக்கங்களை கொண்ட இந்த நாவலை எழுதிய ஏ.எல்.சூர்யா, தனது ‘பீ பாஸிட்டிங் புரொடக்‌ஷன்ஸ்’ என்ற நிறுவனத்தின் மூலம் வெளியிட்டிருக்கிறார்.

 

சினிமாத்துறையோடு நெருக்கமான தொடர்பு கொண்டிருக்கும் ஏ.எல்.சூர்யா, தான் சந்தித்து பழகிய பலரிடமும் தனக்கு உண்டான மறக்க முடியாத அனுபவங்களையும், இனிய நினைவுகளையும், கசப்பான உண்மைகளையும், மனதில் ஆழமாக பதிந்த சம்பவங்களையும், ஆற முடியாத காயங்களையும் நாவலாக எழுதியிருக்கிறார்.

 

இதில் பிரபல நடிகை, கதாபாத்திரமாக வருகிறார். சாதனைகள் பல படைத்த புகழ் பெற்ற திரைப்பட இயக்குநர் ஒருவரும் வருகிறார். இவர்களை தவிர, வேறு பல சினிமாத்துறை கதாபாத்திரங்களும் இதில் வருகிறார்கள். அவர்கள் யார்? என்பதை நாவலை படிக்கும் போதே, நாம் கண்டு பிடித்துவிடலாம்.

 

Al Surya

 

ஏற்கனவே, பல்வேறு தலைப்புகளில் ஏ.எல்.சூர்யா பேசிய 175 வீடியோ பதிவுகள் யூடியூபில் பரபரப்பை ஏற்படுத்தி பல லட்சக்கணக்கான பார்வையாளர்களை கடந்துள்ளது.

 

மேலும், இதற்கு முன்பு ஏ.எல்.சூர்யா எழுதிய ’ஆழ்மனமும் அதன் அபரிமித ரகசியங்களும்’, பணமே...பணமே...ஓடி வா’, ’பேராற்றல் படைத்தவர்களே...எழுந்திருங்கள்’, ‘கோடிக்கணக்கான ரூபாயை ஆழ்மனதை இயக்கி அடைவது எப்படி?’ ஆகிய நூல்கள் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.

 

தற்போது, ‘அனிதா பத்மா பிருந்தா’ நாவலை எழுதியிருக்கும் ஏ.எல்.சூர்யா, எழுதியதுடன் நிற்காமல், அதை பட உலகில் உள்ள நிறிஅய பிரபலங்களுக்கு அனுப்பி வைத்து வர, இந்த நாவல் பட உலகைல் என்ன தாக்கத்தை உண்டாக்குகிறது, என்பதை காத்திருந்து பார்ப்போம்.

Related News

4369

’45’ படம் தனி உலகம்! – நடிகர் சிவராஜ்குமார் கூறிய சுவாரஸ்ய தகவல்
Monday December-22 2025

சுரஜ் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் ரமேஷ் ரெட்டி தயாரிப்பில், டாக்டர்...

பிரபல ஆபரண நிறுவனத்தின் விளம்பரத் தூதரான நடிகர் துல்கர் சல்மான்!
Monday December-22 2025

60 ஆண்டுகளுக்கும் அதிகமாக இந்தியாவின் மிகவும் நம்பகமான ஆபரண நிறுவனமாக இயங்கி வரும் ஜோஸ் ஆலுக்காஸ், பிரபல நடிகர் துல்கர் சல்மான் தனது பிராண்டின் விளம்பரத் தூதராக இணைந்திருப்பதை பெருமகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளது...

சென்னையைக் கவர்ந்த டொயோட்டாவின் ’டிரம் டாவோ’ இசை நிகழ்ச்சி!
Monday December-22 2025

டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் (TKM) மற்றும் DRUM TAO ஆகியவை இரண்டாவது முறையாக சென்னைக்கு மறக்க முடியாத ஆற்றல் மற்றும் தாள கலவையை கொண்டு வந்தன, மக்களின் தேவைக்கேற்ப மீண்டும் வந்தன...

Recent Gallery