17 வருடங்களாக தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோயினாக வலம் திரிஷாவின் மார்க்கெட் சரிந்த நேரத்தில் ‘96’ திரைப்படம் மீண்டும் அவரது மார்க்கெட்டை தூக்கி நிறுத்தியுள்ளது. தற்போது ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் திரிஷா முன்னணி ஹீரோக்களுடன் மட்டும் இன்றி இளம் ஹீரோக்களுடனும் ஜோடி சேர்ந்து நடித்து வருகிறார்.
தெலுங்கு நடிகர் ராணாவும் திரிஷாவும் காதலிப்பதாக வெளியான தகவலை தொடர்ந்து இருவரும் டேட்டிங் செய்ததாக ராணாவே பேட்டி ஒன்றில் கூறியிருந்தார். மேலும், ராணாவும், திரிஷாவும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் சமீபத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இதற்கிடையே, சென்னையை சேர்ந்த தொழிலதிபரும், திரைப்பட தயாரிப்பாளருமான வருண் மணியனோடு காதல் கொண்ட திரிஷாவுக்கு அவருடன் திருமண நிச்சயதார்த்தமும் நடைபெற்ற நிலையில், திடீரென்று இருவரும் பிரிந்ததோடு, திருமணமும் நின்றுவிட்டது.
இதற்கு காரணம், தான் தொடர்ந்து சினிமாவில் நடிப்பதை வருண் மணியன் குடும்பம் ஏற்கவில்லை, அதனால் தான் திருமணத்தை நிறுத்தினேன், என்று திரிஷா கூறினார். வருண் மணியன் தரப்பில் இருந்து எந்த விளக்கமும் கூறவில்லை.
அதே சமயம், தனது திருமணம் நின்றது குறித்து பேட்டிகளில் பேசி வந்த திரிஷா, திருமணத்திற்குப் பிறகும் தொடர்ந்து நடிப்பேன், பிரசவ காலத்தில் மட்டுமே நடிப்புக்கு ஓய்வு அளிப்பேன், மற்றபடி தான் இறக்கும் வரை நடித்துக் கொண்டு தான் இருப்பேன். தற்போது திருமணம் பற்றி எதுவும் யோசிக்கவில்லை, என்றும் கூறியிருந்தார்.
இந்த நிலையில், திரிஷா தனது திருமணம் குறித்து திடீரென்று அறிவித்திருக்கிறார். அதாவாது, இப்போதைக்கு தான் யாரையும் காதலிக்கவில்லை, சரியான ஒருவரை சந்தித்தால் நாளையே திருமணம் செய்ய தயார், என்று திரிஷா சமீபத்திய பேட்டியில் கூறியிருக்கிறார்.
அப்படியானால், திரிஷா தற்போது திருமணத்திற்கு தயாராகிவிட்டார் போல, அந்த சரியான நபர் யார் என்பதை எப்போது அறிவிப்பாரோ!
சுரஜ் புரொடக்ஷன்ஸ் சார்பில் ரமேஷ் ரெட்டி தயாரிப்பில், டாக்டர்...
60 ஆண்டுகளுக்கும் அதிகமாக இந்தியாவின் மிகவும் நம்பகமான ஆபரண நிறுவனமாக இயங்கி வரும் ஜோஸ் ஆலுக்காஸ், பிரபல நடிகர் துல்கர் சல்மான் தனது பிராண்டின் விளம்பரத் தூதராக இணைந்திருப்பதை பெருமகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளது...
டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் (TKM) மற்றும் DRUM TAO ஆகியவை இரண்டாவது முறையாக சென்னைக்கு மறக்க முடியாத ஆற்றல் மற்றும் தாள கலவையை கொண்டு வந்தன, மக்களின் தேவைக்கேற்ப மீண்டும் வந்தன...