Latest News :

பிரிந்த நட்சத்திர தம்பதி மீண்டும் சேர்ந்தனர்!
Tuesday September-05 2017

கணவன் மனைவியான பிரபல ஹாலிவுட் நடிகர் பிராட் பிட் - நடிகை ஏஞ்சலினா ஜூலி, கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஆண்டு பிரிந்த நிலையில், தற்போது அவர்கள் மீண்டும் ஒன்று சேர்ந்துள்ளனர்.

 

பிராட் பிட்டின் குடி மற்றும் போதை பழக்கம் அதனால் ஏற்படும் பிரச்சினைகளினால் குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்கப்படுகிறது. எனவே அவரை நான் குழந்தைகளின் நலன் கருதி பிரிகிறேன், என்று நடிகை ஏஞ்சலினா ஜூலி கூறி அவரை பிரிந்தார்.

 

மேலும், இருவரும் நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு தாக்கல் செய்தனர். இந்த வழக்கில் இன்னும் தீர்ப்பு வழங்கப்படாத நிலையில், இருவரையும் சமர்சப்படுத்தும் முயற்சி மேற்கொள்ளப்பட்டதுடன், இருவருக்கும் நீதிமன்றம் சார்பில் ஆலோசனை வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது.

 

இந்த நிலையில், பிராட் பிட் மற்றும் ஏஞ்சலினா ஜோடி சந்தித்து பேச்சு வார்த்தை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. மேலும் சந்திப்பின் போது இருவருக்கும் இடையே மோதல் ஏதும் ஏற்பட்டுவிடாமல் இருக்க நடுவர் ஒருவரும் அந்த சந்திப்பில் கலந்துக்கொண்டார். ஆனால், யாரும் எதிர்ப்பார்க்காத அளவுக்கு, சந்தித்த இருவரும் கட்டு தழுவிக் கொண்டு கண்ணீர் விட்டு அழுதுள்ளனர்.

 

தற்போது இருவரும் மீண்டும் ஒன்று சேர்ந்து வாழ நினைப்பதுடன், ஒருவருக்கொருவர் எந்த அளவுக்கு முக்கியம் என்பதை நன்கு உணர்ந்த பிறகே இந்த முடிவுக்கு வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

Related News

438

சண்டைப் பயிற்சிக்கான சர்வதேச விருது பட்டியல்! - அனல் அரசு பணியாற்றிய ‘ஜவான்’ தேர்வு!
Friday April-19 2024

இந்திய திரையுலகின் முன்னணி சண்டைப்பயிற்சி இயக்குநராக வலம் வரும் அனல் அரசு, பல மொழித்திரைபப்டங்களில், சண்டைப்பயிற்சி இயக்குநராக பணியாற்றி வருவதோடு, பல முன்னணி ஹீரோக்களின் பேவரைட் சண்டைப்பயிற்சி இயக்குநராகவும் திகழ்கிறார்...

’மிராய்’ மூலம் மீண்டும் மிரட்ட வரும் தேஜா சஜ்ஜா!
Friday April-19 2024

‘ஹனுமன்’ படத்தின் மூலம் தெலுங்கு ரசிகர்கள் மட்டும் இன்றி இந்திய அளவில் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் இளம் நடிகர் தேஜா சஜ்ஜா...

‘உப்பு புளி காரம்’ இணையத்தொடரின் முதல் பார்வை வெளியீடு
Friday April-19 2024

இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான டிஸ்னி பிலஸ் ஹாட்ஸ்டார் தனது புதிய இணையத் தொடருக்கு ‘உப்பு புளி காரம்’ என்று தலைப்பு வைத்துள்ளது...