Latest News :

ரசிகர்களுக்காக அஜித் எடுத்த ரிஸ்க்!
Sunday March-17 2019

அஜித்தின் 59 வது படமாக உருவாகி வரும் ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் அஜித்துக்கு ஜோடியாக வித்யா பாலன் நடிக்கிறார். அஜித் மற்றும் வித்யா பாலன் பங்குபெறும் காட்சிகள் கடந்த இரண்டு நாட்களாக படமாக்கப்பட்டு வருகிறது.

 

‘பிங்க்’ இந்தி படத்தின் ரீமேக்கான ‘நேர்கொண்ட பார்வை’ படத்தில் இயக்குநர் எச்.வினோத் பல மாற்றங்களை செய்திருக்கிறாராம். குறிப்பாக இந்தி பிங்க் படத்தில் ஆக்‌ஷன் காட்சிகள் இல்லை என்றாலும், அஜித் ரசிகர்களுக்காக நேர்கொண்ட பார்வையில் பல ஆக்‌ஷன் காட்சிகளை வினோத் வைத்திருப்பதாக கூறப்படுகிறது.

 

இந்த நிலையில், படத்தில் இடம்பெறும் ஆக்‌ஷன் காட்சிகளில் அஜித், எந்தவித டூப்பும் இல்லாமல் ரிக்ஸ் எடுத்து நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

சமீபத்தில் மழையில் பயங்கரமான ஆக்‌ஷன் காட்சி ஒன்று படமாக்கப்பட்டதாம், இதில் அஜித் உயிரை பணயம் வைத்து ரிஸ்க் எடுத்து நடித்தாராம். எதற்காக இப்படி ஒரு ரிஸ்க், என்று படக்குழுவினர் அவரிடம் கேட்டதற்கு, ”எல்லாம் ரசிகர்களுக்காக தான்” என்று கூறினாராம்.

Related News

4380

ஷேனிடம் நிறைய கற்றுக் கொண்டேன் - நடிகர் சாந்தனு
Saturday September-20 2025

தயாரிப்பாளர் சாந்தோஷ் டி.குருவில்லா மற்றும் தயாரிப்பாளர் பினு ஜார்ஜ் அலெக்சாண்டர் இணைந்து தயாரித்திருக்கும் படம் தான் பல்டி...

நடிகர் ரோபோ சங்கர் மறைவு! - திரையுலகம் அதிர்ச்சி
Thursday September-18 2025

பிரபல திரைப்பட காமெடி நடிகர் ரோபோ சங்கர் உடல் நலக்குறைவால் இன்று உயிரிழந்தார்...

ஜீ5-ன்‘வேடுவன்’ இணையத் தொடர் அக்டோபர் 10 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகிறது
Wednesday September-17 2025

இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ZEE5, தனது அடுத்த அதிரடி தமிழ் ஒரிஜினல் சீரிஸான “வேடுவன்” சீரிஸ், வரும் அக்டோபர் 10 ஆம் முதல் ஸ்ட்ரீமாகவுள்ளதாக அதிகாரப்பூர்வ  அறிவிப்பை வெளியிட்டுள்ளது...

Recent Gallery