அஜித்தின் 59 வது படமாக உருவாகி வரும் ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் அஜித்துக்கு ஜோடியாக வித்யா பாலன் நடிக்கிறார். அஜித் மற்றும் வித்யா பாலன் பங்குபெறும் காட்சிகள் கடந்த இரண்டு நாட்களாக படமாக்கப்பட்டு வருகிறது.
‘பிங்க்’ இந்தி படத்தின் ரீமேக்கான ‘நேர்கொண்ட பார்வை’ படத்தில் இயக்குநர் எச்.வினோத் பல மாற்றங்களை செய்திருக்கிறாராம். குறிப்பாக இந்தி பிங்க் படத்தில் ஆக்ஷன் காட்சிகள் இல்லை என்றாலும், அஜித் ரசிகர்களுக்காக நேர்கொண்ட பார்வையில் பல ஆக்ஷன் காட்சிகளை வினோத் வைத்திருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், படத்தில் இடம்பெறும் ஆக்ஷன் காட்சிகளில் அஜித், எந்தவித டூப்பும் இல்லாமல் ரிக்ஸ் எடுத்து நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சமீபத்தில் மழையில் பயங்கரமான ஆக்ஷன் காட்சி ஒன்று படமாக்கப்பட்டதாம், இதில் அஜித் உயிரை பணயம் வைத்து ரிஸ்க் எடுத்து நடித்தாராம். எதற்காக இப்படி ஒரு ரிஸ்க், என்று படக்குழுவினர் அவரிடம் கேட்டதற்கு, ”எல்லாம் ரசிகர்களுக்காக தான்” என்று கூறினாராம்.
பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்க, அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா நடிப்பில் வெளியான 'தாய் கிழவி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது...
வ்யோம் என்டர்டெயின்மென்ட்ஸ் (Vyom Entertainments) நிறுவனம் சார்பில் விஜயா சதிஷ் மற்றும் ஆர்...
மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்க, மிகப்பெரிய படைப்பாக உருவாகி வரும் ’பேட்ரியாட்' திரைப்படத்தில் நடிகை நயன்தாரா நடித்துள்ள கதாபாத்திரத்தின் சிறப்பு போஸ்டர் பெண்கள் தினத்தை முன்னிட்டு நேற்று முன் தினம் வெளியிடப்பட்டுள்ளது...