Latest News :

பிரபல நடிகைக்கு 20 அறுவை சிகிச்சைகள்! - எதற்கு தெரியுமா?
Monday March-18 2019

திரைப்பட நடிகர், நடிகைகள் பேர், புகழ், செல்வம் என்று சந்தோஷமான வாழ்க்கையை அனுபவித்து வருகிறார்கள், என்று தான் ரசிகர்களும், பொது மக்களும் அறிவார்கள். ஆனால், அவர்கள் அறியாத பல துயரங்களை பல சினிமா பிரபலங்கள் அனுபவித்து வருகிறார்கள். இதில், சிலரது துயரங்கள் வெளியுலகிற்கு தெரிந்தாலும், பலரது சோகக் கதைகள் தெரியாமலேயே போய்விடுகிறது.

 

அந்த வகையில், பிரபல நடிகையான சோனாலி பிந்த்ரே, தான் அனுபவித்த துயரங்களை பகிர்ந்துக் கொண்டிருப்பது ஒட்டு மொத்த இந்திய திரையுலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

 

’காதலர் தினம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமான சோனாலி பிந்த்ரே, பல இந்தி திரைப்படங்களில் நடித்திருப்பதோடு, சர்வதேச மாடலாகவும் வலம் வந்திருக்கிறார். பிறகு திருமணம் செய்துக் கொண்டு குழந்தைகள், குடும்பம் என்று இல்லத்தரசியாக வாழ்ந்து வந்தார்.

 

இதற்கிடையே, புற்றுநோயால் சோனாலி பிந்த்ரே பாதிக்கப்பட்டது பலருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து அவருக்கு வெளிநாட்டில் சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது சிகிச்சைக்குப் பிறகு குணமடைந்து மீண்டும் இந்தியா திரும்பியுள்ள சோனாலி பிந்த்ரே, தனது அனுபவங்களை சமீபத்திய பேட்டி ஒன்றில் பகிர்ந்துக் கொண்டுள்ளார்.

 

அதில், புற்றுநோயை மறைக்க விரும்பாமல் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டேன். ஆரோக்கியத்தை உருவாக்கும் எத்தனையோ பொருட்களுக்கு தூதுவராக இருந்த எனக்கு புற்றுநோய் என்றதும் வாழ்க்கை தலைகீழாக ஆனது. எல்லோரும் தைரியம் கொடுத்தனர். இதனால் நோயை எதிர்கொள்ள நம்பிக்கை வந்தது.

 

அறுவை சிகிச்சைக்கு பிறகும் கஷ்டப்பட்டேன். எனது உடலில் 20 இடங்களில் ஆபரேஷன் செய்திருக்கிறார்கள். அதற்கான வடுக்கள் இருக்கிறது. நான் மறுபடியும் செய்ய வேண்டிய வேலை இருப்பதால் கடவுள் காப்பாற்றி அனுப்பி இருக்கிறார் என்று தோன்றுகிறது. இல்லாவிட்டால் உயிர் போகிற அளவுக்கு போய் திரும்ப வந்து இருக்க மாட்டேன்.” என்று தெரிவித்திருக்கிறார்.

 

Sonali Bindhrey

 

மேலும், எத்தனையோ எண்ணெய் மற்றும் ஷாம்பூ விளம்பரத்தில் நடித்த நான், தற்போது என் தலை முடியை முழுவதுமாக இழந்துவிட்டேன், என்றும் சோனாலி தனது வருத்தத்தை பதிவு செய்திருக்கிறார்.

Related News

4390

ஷேனிடம் நிறைய கற்றுக் கொண்டேன் - நடிகர் சாந்தனு
Saturday September-20 2025

தயாரிப்பாளர் சாந்தோஷ் டி.குருவில்லா மற்றும் தயாரிப்பாளர் பினு ஜார்ஜ் அலெக்சாண்டர் இணைந்து தயாரித்திருக்கும் படம் தான் பல்டி...

நடிகர் ரோபோ சங்கர் மறைவு! - திரையுலகம் அதிர்ச்சி
Thursday September-18 2025

பிரபல திரைப்பட காமெடி நடிகர் ரோபோ சங்கர் உடல் நலக்குறைவால் இன்று உயிரிழந்தார்...

ஜீ5-ன்‘வேடுவன்’ இணையத் தொடர் அக்டோபர் 10 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகிறது
Wednesday September-17 2025

இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ZEE5, தனது அடுத்த அதிரடி தமிழ் ஒரிஜினல் சீரிஸான “வேடுவன்” சீரிஸ், வரும் அக்டோபர் 10 ஆம் முதல் ஸ்ட்ரீமாகவுள்ளதாக அதிகாரப்பூர்வ  அறிவிப்பை வெளியிட்டுள்ளது...

Recent Gallery