சமுத்திரக்கனி இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ‘நிமிர்ந்து நில்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ராகினி திவேதி. இப்படத்தை தொடர்ந்து ‘அரியான்’ என்ற தமிழ்ப் படத்திலும் நடித்த ராகினி, தற்போது ஜெயலலிதா வாழ்க்கைப் படமாக உருவாகும் ‘அம்மா’ படத்திலும் நடித்து வருகிறார்.
கன்னட சினிமாவை சேர்ந்த இவர், தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளிலும் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், நடிகை ராகினி திவேதியுடன் ஆர்.டி.ஓ அதிகாரி ஒருவர் நட்சத்திர ஓட்டல் இன்றில் இரவு விருந்தில் கலந்துக் கொண்ட போது ராகினியின் ஆண் நண்பர் மூலம் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகை ராகினி திவேதி, தனது நண்பரான ஆர்.டி.ஓ அதிகாரி ரவிசங்கர் என்பவருடன் பெங்களூர் ரெசிடென்சி சாலையில் உள்ள ஐந்து நட்சத்திர ஓட்டலுக்கு சாப்பிட சென்றார். இரவு 11.45 மணி அளவில் ராகினியின் மற்றொரு நண்பரான சிவபிரகாஷ் என்பவர் அதே ஓட்டலுக்கு வந்தார்.
ஓட்டலில் ராகினியுடன் ரவிசங்கரை பார்த்த சிவபிரகாஷ், கோபம் அடைந்ததோடு, ராகினியுடன் வாக்குவதத்தில் ஈடுபட்டவர், பீர் பாட்டிலை எடுத்து ரவியின் தலையில் உடைத்தார். இதில் காயம் அடைந்த ரவி, ரத்தம் சொட்ட சொட்ட, அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டார்.
சிகிச்சைக்குப் பிறகு காவல் நிலையம் சென்று சிவபிரகாஷ் மீது ரவிசங்கர் புகார் அளித்தார். இதையடுத்து, சிவபிரகாஷ் மீது மூன்று பிரிவுகளில் போலிசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகியுள்ள ‘கிங்டம்’ திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது...
சிவகார்த்திகேயன் புரொடக்சன்ஸ் வழங்கும் இயக்குநர் ராஜவேல் இயக்கத்தில் நடிகர்கள் தர்ஷன், காளி வெங்கட், ஆர்ஷா பைஜூ உள்ளிட்டப் பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'ஹவுஸ் மேட்ஸ்'...
18 கிரியேட்டர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சசிகலா பிரபாகரன் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் பாலாஜி செல்வராஜ் இயக்கத்தில், நடிகர் சரவணன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிக்க, நீதிமன்ற வழக்கின் பின்னணியில், அசத்தலான இணையத் தொடராக ZEE5-ல் 2025 ஜூலை 18 ஆம் தேதி வெளியான ‘சட்டமும் நீதியும்’ தொடர், ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று, வெற்றியடைந்துள்ளது...