சமுத்திரக்கனி இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ‘நிமிர்ந்து நில்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ராகினி திவேதி. இப்படத்தை தொடர்ந்து ‘அரியான்’ என்ற தமிழ்ப் படத்திலும் நடித்த ராகினி, தற்போது ஜெயலலிதா வாழ்க்கைப் படமாக உருவாகும் ‘அம்மா’ படத்திலும் நடித்து வருகிறார்.
கன்னட சினிமாவை சேர்ந்த இவர், தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளிலும் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், நடிகை ராகினி திவேதியுடன் ஆர்.டி.ஓ அதிகாரி ஒருவர் நட்சத்திர ஓட்டல் இன்றில் இரவு விருந்தில் கலந்துக் கொண்ட போது ராகினியின் ஆண் நண்பர் மூலம் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகை ராகினி திவேதி, தனது நண்பரான ஆர்.டி.ஓ அதிகாரி ரவிசங்கர் என்பவருடன் பெங்களூர் ரெசிடென்சி சாலையில் உள்ள ஐந்து நட்சத்திர ஓட்டலுக்கு சாப்பிட சென்றார். இரவு 11.45 மணி அளவில் ராகினியின் மற்றொரு நண்பரான சிவபிரகாஷ் என்பவர் அதே ஓட்டலுக்கு வந்தார்.
ஓட்டலில் ராகினியுடன் ரவிசங்கரை பார்த்த சிவபிரகாஷ், கோபம் அடைந்ததோடு, ராகினியுடன் வாக்குவதத்தில் ஈடுபட்டவர், பீர் பாட்டிலை எடுத்து ரவியின் தலையில் உடைத்தார். இதில் காயம் அடைந்த ரவி, ரத்தம் சொட்ட சொட்ட, அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டார்.
சிகிச்சைக்குப் பிறகு காவல் நிலையம் சென்று சிவபிரகாஷ் மீது ரவிசங்கர் புகார் அளித்தார். இதையடுத்து, சிவபிரகாஷ் மீது மூன்று பிரிவுகளில் போலிசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சுரஜ் புரொடக்ஷன்ஸ் சார்பில் ரமேஷ் ரெட்டி தயாரிப்பில், டாக்டர்...
60 ஆண்டுகளுக்கும் அதிகமாக இந்தியாவின் மிகவும் நம்பகமான ஆபரண நிறுவனமாக இயங்கி வரும் ஜோஸ் ஆலுக்காஸ், பிரபல நடிகர் துல்கர் சல்மான் தனது பிராண்டின் விளம்பரத் தூதராக இணைந்திருப்பதை பெருமகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளது...
டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் (TKM) மற்றும் DRUM TAO ஆகியவை இரண்டாவது முறையாக சென்னைக்கு மறக்க முடியாத ஆற்றல் மற்றும் தாள கலவையை கொண்டு வந்தன, மக்களின் தேவைக்கேற்ப மீண்டும் வந்தன...