Latest News :

திரில்லர் படம் மூலம் சினிமாவுக்கு எண்ட்ரியாகும் பிரபல மாடல் பிரதைனி சர்வா!
Tuesday March-19 2019

சென்னையை சேர்ந்த பிரபல மாடல் அழகியான பிரதைனி சர்வா, நீண்ட நாட்களாக பல சினிமா வாய்ப்புகளை நிரகாரித்து வந்த நிலையில், தற்போது திரில்லர் படம் ஒன்றின் மூலம் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாகிறார்.

 

பல்வேறு விளம்பரப் படங்களில் நடித்திருப்பதோடு, இந்திய அளவில் முன்னணி மாடல்களில் ஒருவராக வலம் வந்தவர் பிரதைனி சர்வா. இவர் இல்லாத மாடலிங் ஷோக்களே இல்லை, என்று சொல்லும் அளவுக்கு அனைத்து பேஷன் ஷோக்களிலும் இவர் நிச்சயம் இருப்பார். கவர்ச்சியும், அழகும் ஒருங்கே பெற்ற பிரதைனியை நடிக்க வைக்க பலர் முயற்சித்தாலும், சரியான வாய்ப்புகள் அமையாததால் திரைப்படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்த பிரதைனிக்கு, அறிமுக இயக்குநர் கே.ஆர்.சந்த்ரு, இயக்கத்தில் உருவாகும்’போதை ஏறி புத்தி மாறி’ படத்தின் கதை பிடித்திருந்ததால் நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார்.

 

ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெயின்மெண்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் ஸ்ரீநிதி சாகர் தயாரிக்கும் இப்படத்திற்கு கேபி இசையமைக்க, பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்கிறார். கோபி ஆனந்த் கலையை நிர்மாணிக்க, சாபு ஜோசப் படத்தொகுப்பு செய்கிறார்.

 

திரில்லர் படமாக உருவாகும் ‘போதை ஏறி புத்தி மாறி’ படத்தில் பிரதைனிக்கு ஜோடியாக, தீரஜ் என்பவர் நடிக்கிறார்.

 

சினிமாவில் சில பெண் கதாபாத்திரங்களை தொடர்ந்து கவனித்து வருவதோடு, அவை பார்வையாளர்களை ஊக்குவிப்பதோடு, உற்சாகப்படுத்துவதாகவும் அமைகிறது. அப்படிப்பட்ட கதாபாத்திரங்களுக்காக தான் காத்திருந்ததாக, கூறிய பிரதைனி, இயக்குநர் சந்துருவின் ஹீரோயின் கதாபாத்திரம் அப்படிப்பட்ட கதாபாத்திரமாக இருந்ததால் தான் நடிக்க சம்மதம் தெரிவித்தேன், என்றார்.

 

மேலும், நடிகைகள் வெறுமனே பார்பி பொம்மைகளாகவும், கவர்ச்சி சின்னங்களாகவும் சித்தரிக்கப்படக் கூடாது என்பதில் தெளிவாக இருக்கும் நான், இப்படத்தில் நான் நடிக்க இருக்கும் பிருந்தா கதாபாத்திரம் எனக்கு பிடித்தது, என் கதாபாத்திரம் மட்டும் இன்றி இயக்குநர் சந்துருவின் கதையும் மனதுக்கு பிடித்ததால், நடிக்க சம்மதித்தேன், என்றார்.


Related News

4396

’45’ படம் தனி உலகம்! – நடிகர் சிவராஜ்குமார் கூறிய சுவாரஸ்ய தகவல்
Monday December-22 2025

சுரஜ் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் ரமேஷ் ரெட்டி தயாரிப்பில், டாக்டர்...

பிரபல ஆபரண நிறுவனத்தின் விளம்பரத் தூதரான நடிகர் துல்கர் சல்மான்!
Monday December-22 2025

60 ஆண்டுகளுக்கும் அதிகமாக இந்தியாவின் மிகவும் நம்பகமான ஆபரண நிறுவனமாக இயங்கி வரும் ஜோஸ் ஆலுக்காஸ், பிரபல நடிகர் துல்கர் சல்மான் தனது பிராண்டின் விளம்பரத் தூதராக இணைந்திருப்பதை பெருமகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளது...

சென்னையைக் கவர்ந்த டொயோட்டாவின் ’டிரம் டாவோ’ இசை நிகழ்ச்சி!
Monday December-22 2025

டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் (TKM) மற்றும் DRUM TAO ஆகியவை இரண்டாவது முறையாக சென்னைக்கு மறக்க முடியாத ஆற்றல் மற்றும் தாள கலவையை கொண்டு வந்தன, மக்களின் தேவைக்கேற்ப மீண்டும் வந்தன...

Recent Gallery