தமிழ் சினிமாவில் சொந்தமாக படம் தயாரிக்கும் நடிகர்கள் மற்றும் இயக்குநர்கள் சிலர் கடனில் சிக்கி தவிப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. முன்னணி நடிகரான தனுஷும் கடன் தொல்லையால், படம் தயாரிப்பதை நிறுத்திவிட்டதாக கூறப்பட்டது.
இந்த நிலையில், தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான கெளதம் வாசுதேவ் மேனனுக்கு ரூ.150 கோடி கடன் இருப்பதாக பைனான்சியர் ஒருவர் பத்திரிகையில் தெரிவித்துள்ளார்.
தனுஷை வைத்து ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ மற்றும் விக்ரமை வைத்து ‘துருவ நட்சத்திரம்’ ஆகிய படங்களை இயக்கியிருக்கும் கெளதம் மேனன், அப்படங்களை ரிலீஸ் செய்ய முடியாமல் தவித்து வருவதற்கும் கடன் தொல்லை தான் என்றும் கூறப்படுகிறது.

படம் இயக்குவதோடு, படம் தயாரிப்பு, வெப் சீரிஸ் தயாரிப்பு, திரைப்பட விநியோகம் என்று பலவற்றில் ஈடுபட்ட கெளதம் மேனனுக்கு பெரும் நஷ்ட்டம் ஏற்பட்டதோடு, அவர் வாங்கிய கடன் தற்போது வட்டியோ சேர்த்து ரூ.150 கோடியாக விஸ்வரூபம் எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.
பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்க, அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா நடிப்பில் வெளியான 'தாய் கிழவி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது...
வ்யோம் என்டர்டெயின்மென்ட்ஸ் (Vyom Entertainments) நிறுவனம் சார்பில் விஜயா சதிஷ் மற்றும் ஆர்...
மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்க, மிகப்பெரிய படைப்பாக உருவாகி வரும் ’பேட்ரியாட்' திரைப்படத்தில் நடிகை நயன்தாரா நடித்துள்ள கதாபாத்திரத்தின் சிறப்பு போஸ்டர் பெண்கள் தினத்தை முன்னிட்டு நேற்று முன் தினம் வெளியிடப்பட்டுள்ளது...