தமிழ் சினிமாவில் சொந்தமாக படம் தயாரிக்கும் நடிகர்கள் மற்றும் இயக்குநர்கள் சிலர் கடனில் சிக்கி தவிப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. முன்னணி நடிகரான தனுஷும் கடன் தொல்லையால், படம் தயாரிப்பதை நிறுத்திவிட்டதாக கூறப்பட்டது.
இந்த நிலையில், தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான கெளதம் வாசுதேவ் மேனனுக்கு ரூ.150 கோடி கடன் இருப்பதாக பைனான்சியர் ஒருவர் பத்திரிகையில் தெரிவித்துள்ளார்.
தனுஷை வைத்து ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ மற்றும் விக்ரமை வைத்து ‘துருவ நட்சத்திரம்’ ஆகிய படங்களை இயக்கியிருக்கும் கெளதம் மேனன், அப்படங்களை ரிலீஸ் செய்ய முடியாமல் தவித்து வருவதற்கும் கடன் தொல்லை தான் என்றும் கூறப்படுகிறது.

படம் இயக்குவதோடு, படம் தயாரிப்பு, வெப் சீரிஸ் தயாரிப்பு, திரைப்பட விநியோகம் என்று பலவற்றில் ஈடுபட்ட கெளதம் மேனனுக்கு பெரும் நஷ்ட்டம் ஏற்பட்டதோடு, அவர் வாங்கிய கடன் தற்போது வட்டியோ சேர்த்து ரூ.150 கோடியாக விஸ்வரூபம் எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.
சுரஜ் புரொடக்ஷன்ஸ் சார்பில் ரமேஷ் ரெட்டி தயாரிப்பில், டாக்டர்...
60 ஆண்டுகளுக்கும் அதிகமாக இந்தியாவின் மிகவும் நம்பகமான ஆபரண நிறுவனமாக இயங்கி வரும் ஜோஸ் ஆலுக்காஸ், பிரபல நடிகர் துல்கர் சல்மான் தனது பிராண்டின் விளம்பரத் தூதராக இணைந்திருப்பதை பெருமகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளது...
டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் (TKM) மற்றும் DRUM TAO ஆகியவை இரண்டாவது முறையாக சென்னைக்கு மறக்க முடியாத ஆற்றல் மற்றும் தாள கலவையை கொண்டு வந்தன, மக்களின் தேவைக்கேற்ப மீண்டும் வந்தன...