‘செக்கச் சிவந்த வானம்’, ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ படங்களை தொடர்ந்து சிம்புவின் அடுத்தப் படமாக ‘மாநாடு’ வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால், தலைப்பு அறிவிப்புக்கு பிறகு அப்படத்தின் படப்பிடிப்பு தொடங்காமலேயே இருக்கிறது.
இதற்கிடையே, மாநாடு படம் டிராப் ஆகும் நிலையில் இருப்பதாக தகவல் வெளியாக, உடனே தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அதற்கு மறுப்பும் தெரிவித்தார்.
இந்த நிலையில், அடுத்த மாதம் ‘மாநாடு’ படப்பிடிப்பு துவங்க உள்ளதாக கூறப்படுவதோடு, படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷனை ஒப்பந்தம் செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
பிரபல இயக்குநர் பிரியதர்ஷன் - நடிகை லிஸி தம்பதியின் மகளான கல்யாணி பிரியதர்ஷனி, தற்போது சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது
பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்க, அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா நடிப்பில் வெளியான 'தாய் கிழவி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது...
வ்யோம் என்டர்டெயின்மென்ட்ஸ் (Vyom Entertainments) நிறுவனம் சார்பில் விஜயா சதிஷ் மற்றும் ஆர்...
மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்க, மிகப்பெரிய படைப்பாக உருவாகி வரும் ’பேட்ரியாட்' திரைப்படத்தில் நடிகை நயன்தாரா நடித்துள்ள கதாபாத்திரத்தின் சிறப்பு போஸ்டர் பெண்கள் தினத்தை முன்னிட்டு நேற்று முன் தினம் வெளியிடப்பட்டுள்ளது...