‘செக்கச் சிவந்த வானம்’, ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ படங்களை தொடர்ந்து சிம்புவின் அடுத்தப் படமாக ‘மாநாடு’ வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால், தலைப்பு அறிவிப்புக்கு பிறகு அப்படத்தின் படப்பிடிப்பு தொடங்காமலேயே இருக்கிறது.
இதற்கிடையே, மாநாடு படம் டிராப் ஆகும் நிலையில் இருப்பதாக தகவல் வெளியாக, உடனே தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அதற்கு மறுப்பும் தெரிவித்தார்.
இந்த நிலையில், அடுத்த மாதம் ‘மாநாடு’ படப்பிடிப்பு துவங்க உள்ளதாக கூறப்படுவதோடு, படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷனை ஒப்பந்தம் செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
பிரபல இயக்குநர் பிரியதர்ஷன் - நடிகை லிஸி தம்பதியின் மகளான கல்யாணி பிரியதர்ஷனி, தற்போது சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது
தயாரிப்பாளர் சாந்தோஷ் டி.குருவில்லா மற்றும் தயாரிப்பாளர் பினு ஜார்ஜ் அலெக்சாண்டர் இணைந்து தயாரித்திருக்கும் படம் தான் பல்டி...
பிரபல திரைப்பட காமெடி நடிகர் ரோபோ சங்கர் உடல் நலக்குறைவால் இன்று உயிரிழந்தார்...
இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ZEE5, தனது அடுத்த அதிரடி தமிழ் ஒரிஜினல் சீரிஸான “வேடுவன்” சீரிஸ், வரும் அக்டோபர் 10 ஆம் முதல் ஸ்ட்ரீமாகவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது...