‘செக்கச் சிவந்த வானம்’, ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ படங்களை தொடர்ந்து சிம்புவின் அடுத்தப் படமாக ‘மாநாடு’ வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால், தலைப்பு அறிவிப்புக்கு பிறகு அப்படத்தின் படப்பிடிப்பு தொடங்காமலேயே இருக்கிறது.
இதற்கிடையே, மாநாடு படம் டிராப் ஆகும் நிலையில் இருப்பதாக தகவல் வெளியாக, உடனே தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அதற்கு மறுப்பும் தெரிவித்தார்.
இந்த நிலையில், அடுத்த மாதம் ‘மாநாடு’ படப்பிடிப்பு துவங்க உள்ளதாக கூறப்படுவதோடு, படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷனை ஒப்பந்தம் செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
பிரபல இயக்குநர் பிரியதர்ஷன் - நடிகை லிஸி தம்பதியின் மகளான கல்யாணி பிரியதர்ஷனி, தற்போது சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது
சுரஜ் புரொடக்ஷன்ஸ் சார்பில் ரமேஷ் ரெட்டி தயாரிப்பில், டாக்டர்...
60 ஆண்டுகளுக்கும் அதிகமாக இந்தியாவின் மிகவும் நம்பகமான ஆபரண நிறுவனமாக இயங்கி வரும் ஜோஸ் ஆலுக்காஸ், பிரபல நடிகர் துல்கர் சல்மான் தனது பிராண்டின் விளம்பரத் தூதராக இணைந்திருப்பதை பெருமகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளது...
டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் (TKM) மற்றும் DRUM TAO ஆகியவை இரண்டாவது முறையாக சென்னைக்கு மறக்க முடியாத ஆற்றல் மற்றும் தாள கலவையை கொண்டு வந்தன, மக்களின் தேவைக்கேற்ப மீண்டும் வந்தன...