மாணவர்களுடன் போராட்டம்! - பிரபல நடிகர் கைது
Friday March-22 2019

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் வீரியம் மற்றும் விஸ்வரூபத்தை தொடர்ந்து, இந்தியா முழுவதும் போராட்டம் என்றாலே அரசுக்கும், காவல் துறைக்கும் காய்ச்சல் வந்து விடுகிறது. இதனால், போராட்டம் என்று யாராவது கிளம்பினால் அவர்களை ஆரம்பத்திலேயே ஆப் செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

 

இந்த நிலையில், பிரபல தெலுங்கு நடிகரான மோகன் பாபு, கல்லூரி மாணவர்களுடன் இணைந்து மாபெரும் போராட்டம் ஒன்றை நடத்த இருந்த நிலையில், அவர் தற்போது போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்ட நடிகர் மோகன் பாபு, ஸ்ரீ வித்யனிகேத்தன் பொறியியல் கல்லூரி மாணவர்களுடன் இணைந்து ஒரு பெரிய போராட்டத்தை திருப்பதியில் நடத்த இருப்பதாகவும், அந்த போராட்டம் தெலுங்கு தேசம் கட்சி அரசுக்கு எதிரான போராட்டம், என்றும் தெரிவித்திருந்தார்.

 

Mohan Babu

 

இந்த விஷயத்தை அறிந்த போலீசார், விபரீதம் ஏதும் ஏற்படும் முன்பாகவே, மோகன் பாபுவை ஹவுஸ் அரெஸ்ட் செய்திருக்கிறார்கள். மோகன் பாபு போராட்டத்தில் கலந்துக் கொள்வதை தடுப்பதற்காக செய்யப்பட்டுள்ள ஹவுஸ் அரெஸ்ட்டில் அவரது மகன் மஞ்சு மனோஜும் உள்ளார்.

Related News

4432

’தாய் கிழவி’ மூலம் நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டேன் - சிவகார்த்திகேயன்
Wednesday March-11 2026

பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்க, அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா நடிப்பில் வெளியான 'தாய் கிழவி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது...

உண்மை சம்பவத்தை இரத்தமும் சதையுமாக சொல்லும் ‘மனிதன் தெய்வமாகலாம்’!
Tuesday March-10 2026

வ்யோம் என்டர்டெயின்மென்ட்ஸ் (Vyom Entertainments) நிறுவனம் சார்பில் விஜயா சதிஷ் மற்றும் ஆர்...

நயன்தாராவை கெளரவித்த ‘பேட்ரியாட்’ படக்குழு!
Tuesday March-10 2026

மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்க, மிகப்பெரிய படைப்பாக உருவாகி வரும் ’பேட்ரியாட்' திரைப்படத்தில்  நடிகை நயன்தாரா நடித்துள்ள கதாபாத்திரத்தின் சிறப்பு போஸ்டர் பெண்கள் தினத்தை முன்னிட்டு நேற்று முன் தினம் வெளியிடப்பட்டுள்ளது...

Recent Gallery