நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள ‘கொலையுதிர் காலம்’ திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் நயன்தாரா உள்ளிட்ட படக்குழுவினர் யாரும் பங்கேற்கவில்லை. அதே சமயம், தயாரிப்பாளர்கள் சுரேஷ் காமாட்சி, எஸ்.எஸ்.துரைராஜ், இயக்குநர்கள் பிரவீன்காந்த், கரு. பழனியப்பன், நடிகர்கள் சாம், ராதாரவி உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டர்கள்.
நிகழ்ச்சியில் பேசியவர்கள் தயாரிப்பாளர்கள் சங்க விவகாரத்தை பற்றி பேசுகையில், ராதாரவி நடிகை நயன்தாராவை இழிவுப்படுத்தும் வகையில் நக்கலாக பேசினார்.
ராதாரவி, நயன்தாரா பற்றி பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், அவருக்கு நடிகர் சங்கம் சார்பாக கண்டனம் தெரிவிக்கப்பட்டிருப்பதோடு, நடிகைகள், நடிகர்கள் என பலர் அவரது பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
இந்த நிலையில், நடிகர் ராதாரவியின் கண்டத்துக்குரிய பேச்சை கண்டித்துள்ள திமுக, அவரை கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கியுள்ளது.
இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது கண்டத்தை தெரிவித்திருப்பதோடு, ”பெண்ணுரிமை முன்னிறுத்தும் திமுகவில் அங்கம் வகிக்கும் நடிகர் ராதாரவியின் திரைத்துறை சார்ந்த பெண் கலைஞர்கள் குறித்த கருத்து ஏற்க இயலாதது. கடும் கண்டனத்திற்குரியது. கழகத்தினர் யாவரும் கண்ணியம் குறையாத வகையில் கருத்துகளை தெரிவிக்க வேண்டும். மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்க, அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா நடிப்பில் வெளியான 'தாய் கிழவி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது...
வ்யோம் என்டர்டெயின்மென்ட்ஸ் (Vyom Entertainments) நிறுவனம் சார்பில் விஜயா சதிஷ் மற்றும் ஆர்...
மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்க, மிகப்பெரிய படைப்பாக உருவாகி வரும் ’பேட்ரியாட்' திரைப்படத்தில் நடிகை நயன்தாரா நடித்துள்ள கதாபாத்திரத்தின் சிறப்பு போஸ்டர் பெண்கள் தினத்தை முன்னிட்டு நேற்று முன் தினம் வெளியிடப்பட்டுள்ளது...