‘தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும்’, ‘பாயும் புலி’ உள்ளிட்ட சில படங்களில் நடித்த ஐஸ்வர்யா தத்தா, பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு பெரிய அளவில் பிரபலமடைந்ததோடு, அவரை தேடி பல சினிமா வாய்ப்புகளும் வரத்தொடங்கியுள்ளது.
தற்போது ‘கெட்டவன்னு பேரு எடுத்த நல்லவண்டா’.’அலேகா’, ‘கன்னித்தீவு’ ஆகிய படங்களில் ஐஸ்வர்யா தத்தா நடித்து வருகிறார்.
இந்த நிலையில், ‘அலேகா’ பட இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமித்ரனுக்கும், ஐஸ்வர்யா தத்தாவுக்கும் இடையே படப்பிடிப்பில் மோதல் ஏற்பட்டுள்ளது.
படப்பிடிப்புக்கு தினமும் ஐஸ்வர்யா தத்தா தாமதமாக வருவதாக கூறப்படுகிறது. அவருக்காக மற்ற நடிகர்களும், தொழில்நுட்ப கலைஞர்களும் காத்திருக்க வேண்டி இருந்ததாம். இதை தொடர்ந்து, அவரிடம் சரியான நேரத்திற்கு படப்பிடிப்பிற்கு வருமாறு இயக்குநர் அறிவுறுத்தியிருக்கிறார். ஆனால், இதை கேட்காத ஐஸ்வர்யா தத்தா, தொடர்ந்து தாமதமாக வர, ஒரு கட்டத்தில் பொருமை இழந்த இயக்குநர் அவரை கண்டிக்க, அவரிடம் ஐஸ்வர்யா தத்தா வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார். இதனை தொடர்ந்து இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட படப்பிடிப்பு தளத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஆரி ஹீரோவாக நடிக்கும் இப்படத்தின் பஸ்ட் லுக் போஸ்டரில், போர்வைக்குள் ஆண் மற்றும் பெண்ணின் கால்கள் மட்டும் தெரியும்படியான புகைப்படம் வெளியிடப்பட்டது. இதை தொடர்ந்து பெரும் சர்ச்சை எழுந்தவுடன், படக்குழு இது காம படம் அல்ல காதல் படம் என்று விளக்கம் அளித்தார்கள்.

தற்போது இயக்குநருக்கும், ஐஸ்வர்யா தத்தாவுக்கு இடையே ஏற்பட்ட மோதலாலும், இப்படம் தொடர்பாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்க, அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா நடிப்பில் வெளியான 'தாய் கிழவி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது...
வ்யோம் என்டர்டெயின்மென்ட்ஸ் (Vyom Entertainments) நிறுவனம் சார்பில் விஜயா சதிஷ் மற்றும் ஆர்...
மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்க, மிகப்பெரிய படைப்பாக உருவாகி வரும் ’பேட்ரியாட்' திரைப்படத்தில் நடிகை நயன்தாரா நடித்துள்ள கதாபாத்திரத்தின் சிறப்பு போஸ்டர் பெண்கள் தினத்தை முன்னிட்டு நேற்று முன் தினம் வெளியிடப்பட்டுள்ளது...