’கொலையுதிர் காலம்’ டிரைலர் வெளியீட்டு விழாவில் நயன்தாராவை இழிவாக பேசியதற்காக நடிகர் ராதாரவிக்கு பலர் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். தொடர்ந்து அவர் நடிகைகளை இழிவாக பேசினால், அவருக்கு நடிக்க தடை விதிக்கப்படும் என்று நடிகர் சங்கம் தெரிவித்திருக்கிறது. அதேபோல், திமுக-வும் அவரை கட்சியில் இருந்து நீக்கிவிட்டது.
நடிகைகள் பலர் ராதாரவியை கலாய்க்கும் விதத்தில் சமூக வலைதளங்களில் பதிவிட்டும் வருகிறார்கள்.
இதற்கிடையே, தனது பேச்சுக்கு விளக்கம் அளித்திருக்கும் ராதாரவி, நயன்தாராவிடம் வருத்தம் தெரிவித்துக் கொள்வதாகவும் தெரிவித்துவிட்டார்.
இந்த நிலையில், சர்ச்சை நடிகையான ஸ்ரீரெட்டி, இது குறித்து கருத்து தெரிவிக்கையில், “ராதாரவி நயன்தாராவை பேசியதை வைத்து இந்த மாதிரியான வார்த்தைகளை நான் ஏற்கமாட்டேன். நேரடியாக சென்று அறைந்துவிடுவேன்.

நயன்தாரா கண்ணியமான பெண், ஆனால் நான் கொடூரமான பெண்.” என்று தெரிவித்திருக்கிறார்.
பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்க, அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா நடிப்பில் வெளியான 'தாய் கிழவி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது...
வ்யோம் என்டர்டெயின்மென்ட்ஸ் (Vyom Entertainments) நிறுவனம் சார்பில் விஜயா சதிஷ் மற்றும் ஆர்...
மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்க, மிகப்பெரிய படைப்பாக உருவாகி வரும் ’பேட்ரியாட்' திரைப்படத்தில் நடிகை நயன்தாரா நடித்துள்ள கதாபாத்திரத்தின் சிறப்பு போஸ்டர் பெண்கள் தினத்தை முன்னிட்டு நேற்று முன் தினம் வெளியிடப்பட்டுள்ளது...