தெலுங்கு சினிமாவில் ஆரம்பித்த மீ டூ விவகாரம், பாடகி சின்மயின் புகாரால் தமிழ் சினிமாவிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து ஸ்ரீ ரெட்டியின் பல புகார்களால் கோடம்பாக்கமே ஆடிப்போனது. இதை தொடர்ந்து நடிகைகள் பலர் மீ டூ பற்றி தங்களது கருத்துக்களை கூறியதோடு, சினிமாவில் படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் இருப்பது உண்மை, தான் என்றும் ஒப்புக் கொண்டார்கள்.
தற்போது, மீ டூ விவகாரம் பற்றி நடிகைகள் யாரும் பேசாமல் இருக்கும் நிலையில், பிரபல தெலுங்கு குணச்சித்திர நடிகையான, கராத்தே கல்யாணி, பிரபல நடிகர் ஒருவர் தன்னை படுக்கைக்கு அழைத்ததாகவும், அதற்காக ரூ.50 ஆயிரம் தருவதாகவும் கூறினார், என்று புகார் கூறியுள்ளார்.
சமீபத்திய பேட்டி ஒன்றில் இது குறித்து கூறிய கராத்தே கல்யாணி, “இது சினிமாவில் மட்டுமல்ல. பல துறைகளில் இருக்கிறது. ஐடி கம்பெனிகளில் கட்டிப்பிடிப்பது, முத்தம் கொடுப்பது எல்லாம் பெரிய விசயமில்லை. சினிமாவில் ஆரம்பத்தில் நானும் வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கப்பட்டேன்.
ஒப்பந்தத்துடன் அதையும் சேர்த்து தான் பேசுகிறார்கள், அதற்காக எனக்கு ரூ.50 ஆயிரம் தருவதாக ஒரு பிரபல நடிகர் கூறினார். ஆனால், நான் அதை அனுமதிக்கவில்லை. இதனால், என்னை வீட்டை விட்டு காலி செய்யும்படி செய்துவிட்டார்கள்.
நாம் மனதளவில் மிகவும் தைரியமாக இருந்தால், யாரும் தொந்தரவு செய்ய மாட்டார்கள். நாம் எப்படி நம்மை வெளிப்படுத்துகிறோம், என்பதில் தான் ஒவ்வொரு விசயமும் இருக்கிறது. அதனால் தான் நான் சினிமாவில் இந்த உயரத்திற்கு வந்துள்ளேன்.” என்று தெரிவித்துள்ளார்.
தயாரிப்பாளர் சாந்தோஷ் டி.குருவில்லா மற்றும் தயாரிப்பாளர் பினு ஜார்ஜ் அலெக்சாண்டர் இணைந்து தயாரித்திருக்கும் படம் தான் பல்டி...
பிரபல திரைப்பட காமெடி நடிகர் ரோபோ சங்கர் உடல் நலக்குறைவால் இன்று உயிரிழந்தார்...
இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ZEE5, தனது அடுத்த அதிரடி தமிழ் ஒரிஜினல் சீரிஸான “வேடுவன்” சீரிஸ், வரும் அக்டோபர் 10 ஆம் முதல் ஸ்ட்ரீமாகவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது...