தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான சுசீந்திரன், கடந்த சில நாட்களுக்கு முன்பு ”அஜித் அரசியலுக்கு வர வேண்டும், தலைமை ஏற்க வா தலைவா” என்று சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
தனக்கும் அரசியலுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை, என்று அஜித் அதிகாரப்பூர்வமாக அறிவித்த பிறகும் அவரை சுசீந்திரன் அரசியலுக்கு அழைத்தது பெரும் சர்ச்சையானதோடு, பலர் அவரை விமர்சனம் செய்தார்கள். ஏன், அஜித் ரசிகர்கள் கூட சுசீந்திரனை கழுவி கழுவி ஊற்றினார்கள்.
இந்த நிலையில், அஜித்தை தான் ஏன் அரசியலுக்கு அழைத்தேன், என்பது குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ள சுசீந்திரன், “அஜித் நிச்சயம் அரசியலுக்கு வருவார்” என்று கூறி மீண்டும் சர்ச்சையை உருவாக்கியுள்ளார்.
இது குறித்து சுசீந்திரன் கூறுகையில், “மக்களுக்கு யாரால் நல்லது நடந்தாலும் நான் வரவேற்க தயார். நான் மற்றவர்கள் பற்றி பேசவில்லை. அஜித் நிச்சயம் அரசியலுக்கு வருவார். இல்லை ஒரு அரசியல் மாற்றத்திற்கு அவர் காரணமாக இருப்பார்.” என்று தெரிவித்துள்ளார்.
இயக்குநர் சுசீந்திரன், தொடர்ந்து அஜித்தை அரசியலுக்கு அழைப்பதால், அவர் மீது அஜித் ரசிகர்களுடன் சேர்த்து விஜய் ரசிகர்களும் கோபத்தில் உள்ளார்கள்.
சுரஜ் புரொடக்ஷன்ஸ் சார்பில் ரமேஷ் ரெட்டி தயாரிப்பில், டாக்டர்...
60 ஆண்டுகளுக்கும் அதிகமாக இந்தியாவின் மிகவும் நம்பகமான ஆபரண நிறுவனமாக இயங்கி வரும் ஜோஸ் ஆலுக்காஸ், பிரபல நடிகர் துல்கர் சல்மான் தனது பிராண்டின் விளம்பரத் தூதராக இணைந்திருப்பதை பெருமகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளது...
டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் (TKM) மற்றும் DRUM TAO ஆகியவை இரண்டாவது முறையாக சென்னைக்கு மறக்க முடியாத ஆற்றல் மற்றும் தாள கலவையை கொண்டு வந்தன, மக்களின் தேவைக்கேற்ப மீண்டும் வந்தன...