தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளின் பட்டியலில் இடம் பிடித்த உடனே குடும்ப பிரச்சினை காரணமாக, கோடம்பாக்கத்தை விட்டு வெளியேறிய அஞ்சலி, தெலுங்கு தேசத்தில் தஞ்சம் அடைந்ததோடு, அங்கே நடிகர் ஒருவரது கட்டுப்பாட்டில் இருந்ததாக கூறப்பட்டது.
பிறகு குடும்ப பிரச்சினைகள் தீர்ந்த நிலையில், மீண்டும் தமிழ்ப் படங்களில் நடிக்க தொடங்கியவர், தற்போது ஏராளமான பட வாய்ப்புகளுடன் மீண்டும் முன்னணி நடிகைகளின் பட்டியலில் இடம்பிடிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
இதற்கிடையே, அவ்வபோது அஞ்சலி குறித்து காதல் கிசிகிசுக்கள் வெளியாகிக் கொண்டிருக்கிறது. அவர் நடிகர் ஜெய்யை காதலிப்பதாகவும், இருவரும் திருமண்ம் செய்துக் கொள்ள இருப்பதாகவும் கூறப்பட்டது. பிறகு ஜெய் இஸ்லாம் மதத்திற்கு மாறியதால், அஞ்சலியையும் அவர் மதம் மாற சொல்வதாகவும், இதனால் இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டு பிரிந்துவிட்டதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில், அஞ்சலி - ஜெய் தற்போது சமாதானமாகிவிட்டதோடு, விரைவில் திருமணம் செய்துக் கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், திருமணத்திற்குப் பிறகு அஞ்சலி நடிப்புக்கு முழுக்கு போட முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஆனால், இதை மறுத்திருக்கும் அஞ்சலி, திருமணம் என்ற தகவல் பொய்யானது, அப்படியே திருமணம் செய்துக் கொண்டாலும் நடிப்பை தொடர்வேன், நிறுத்த மாட்டேன், என்று கூறியுள்ளார்.
பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்க, அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா நடிப்பில் வெளியான 'தாய் கிழவி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது...
வ்யோம் என்டர்டெயின்மென்ட்ஸ் (Vyom Entertainments) நிறுவனம் சார்பில் விஜயா சதிஷ் மற்றும் ஆர்...
மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்க, மிகப்பெரிய படைப்பாக உருவாகி வரும் ’பேட்ரியாட்' திரைப்படத்தில் நடிகை நயன்தாரா நடித்துள்ள கதாபாத்திரத்தின் சிறப்பு போஸ்டர் பெண்கள் தினத்தை முன்னிட்டு நேற்று முன் தினம் வெளியிடப்பட்டுள்ளது...