தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளின் பட்டியலில் இடம் பிடித்த உடனே குடும்ப பிரச்சினை காரணமாக, கோடம்பாக்கத்தை விட்டு வெளியேறிய அஞ்சலி, தெலுங்கு தேசத்தில் தஞ்சம் அடைந்ததோடு, அங்கே நடிகர் ஒருவரது கட்டுப்பாட்டில் இருந்ததாக கூறப்பட்டது.
பிறகு குடும்ப பிரச்சினைகள் தீர்ந்த நிலையில், மீண்டும் தமிழ்ப் படங்களில் நடிக்க தொடங்கியவர், தற்போது ஏராளமான பட வாய்ப்புகளுடன் மீண்டும் முன்னணி நடிகைகளின் பட்டியலில் இடம்பிடிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
இதற்கிடையே, அவ்வபோது அஞ்சலி குறித்து காதல் கிசிகிசுக்கள் வெளியாகிக் கொண்டிருக்கிறது. அவர் நடிகர் ஜெய்யை காதலிப்பதாகவும், இருவரும் திருமண்ம் செய்துக் கொள்ள இருப்பதாகவும் கூறப்பட்டது. பிறகு ஜெய் இஸ்லாம் மதத்திற்கு மாறியதால், அஞ்சலியையும் அவர் மதம் மாற சொல்வதாகவும், இதனால் இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டு பிரிந்துவிட்டதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில், அஞ்சலி - ஜெய் தற்போது சமாதானமாகிவிட்டதோடு, விரைவில் திருமணம் செய்துக் கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், திருமணத்திற்குப் பிறகு அஞ்சலி நடிப்புக்கு முழுக்கு போட முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஆனால், இதை மறுத்திருக்கும் அஞ்சலி, திருமணம் என்ற தகவல் பொய்யானது, அப்படியே திருமணம் செய்துக் கொண்டாலும் நடிப்பை தொடர்வேன், நிறுத்த மாட்டேன், என்று கூறியுள்ளார்.
சுரஜ் புரொடக்ஷன்ஸ் சார்பில் ரமேஷ் ரெட்டி தயாரிப்பில், டாக்டர்...
60 ஆண்டுகளுக்கும் அதிகமாக இந்தியாவின் மிகவும் நம்பகமான ஆபரண நிறுவனமாக இயங்கி வரும் ஜோஸ் ஆலுக்காஸ், பிரபல நடிகர் துல்கர் சல்மான் தனது பிராண்டின் விளம்பரத் தூதராக இணைந்திருப்பதை பெருமகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளது...
டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் (TKM) மற்றும் DRUM TAO ஆகியவை இரண்டாவது முறையாக சென்னைக்கு மறக்க முடியாத ஆற்றல் மற்றும் தாள கலவையை கொண்டு வந்தன, மக்களின் தேவைக்கேற்ப மீண்டும் வந்தன...