‘களவாணி’ படத்தில் வில்லனாக நடித்தவர் திருமுருகன். இவர் இயக்குநர் சற்குணத்திடம் உதவி இயக்குநராக பணியாற்றி வந்த நிலையில், இவரை சற்குணம் நடிகராக மாற்றிவிட்டார்.
‘களவாணி’ படத்தில் இவரது எதார்த்தமான நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டதை தொடர்ந்து, ‘அரவாண்’, ‘என்னமோ நடக்குது’, ‘நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும்’, ‘ 49 ஓ’, ‘ஈட்டி’, ‘பென்சில்’, ‘கட்டப்பாவ காணோம்’ உள்பட பல படங்களில் நடித்து வந்தவர், தற்போது ‘ஓணான்’, ‘அடங்காதே’, ‘டார்ச்லைட்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார்.
திருமுருகனுக்கும், அவரது உறவுக்கார பெண் மோகனப்ரியாவுக்கும், நேற்று (செப்.04) திருமணம் நடைபெற்றது. தஞ்சை அருகே உள்ள பாப்பாநாடு கிராமத்தில் நடைபெற்ற திருமண விழாவில் இயக்குநர் பாரதிராஜா தலைமை தாங்கி திருமணத்தை நடத்தி வைத்தார். மற்றும், இயக்குநர் சற்குணம், நடிகர் விமல் உள்ளிட்ட திரையுல பிரபலங்கள் பலர் இந்த திருமண விழாவில் கலந்துக்கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.
மணப்பெண் மோகனப்ரியா, வருவாய் துறையில் உதவி பிரிவு அலுவலராக பணியாற்றி வருகிறார்.
அஸ்யூர் பிலிம்ஸ் மற்றும் ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், சக்தி பிலிம் ஃபேக்டரி வெளியீட்டில், அறிமுக இயக்குநர் சண்முகபிரியன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, சுஷ்மிதா பட், மீனாட்சி தினேஷ், அருள்தாஸ், ரமேஷ் திலக், முருகானந்தம் உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளியான 'லவ் மேரேஜ்' திரைப்படம் - ரசிகர்களின் பேராதரவுடன் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
தன்வீர் தயானந்த யோகி ஜெயந்தி விழா ஜூலை 2 ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில், இவ்விழாவை முன்னிட்டு ’தெய்வீக அற்புதங்களும் மற்றும் ரகசியங்களும்’ என்று சொல்லக்கூடிய ‘டிவைன் மிராக்கல் அண்ட் சீக்ரெட்ஸ்’ (Divine Miracles and Secrets - Part 2) என்ற புத்தகத்தின் இரண்டாம் பாகம் வெளியிடப்பட்டது...
எஸ்பிஏ புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் உருவாகி இருக்கும் படம் ’மகேஸ்வரன் மகிமை’...