‘களவாணி’ படத்தில் வில்லனாக நடித்தவர் திருமுருகன். இவர் இயக்குநர் சற்குணத்திடம் உதவி இயக்குநராக பணியாற்றி வந்த நிலையில், இவரை சற்குணம் நடிகராக மாற்றிவிட்டார்.
‘களவாணி’ படத்தில் இவரது எதார்த்தமான நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டதை தொடர்ந்து, ‘அரவாண்’, ‘என்னமோ நடக்குது’, ‘நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும்’, ‘ 49 ஓ’, ‘ஈட்டி’, ‘பென்சில்’, ‘கட்டப்பாவ காணோம்’ உள்பட பல படங்களில் நடித்து வந்தவர், தற்போது ‘ஓணான்’, ‘அடங்காதே’, ‘டார்ச்லைட்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார்.
திருமுருகனுக்கும், அவரது உறவுக்கார பெண் மோகனப்ரியாவுக்கும், நேற்று (செப்.04) திருமணம் நடைபெற்றது. தஞ்சை அருகே உள்ள பாப்பாநாடு கிராமத்தில் நடைபெற்ற திருமண விழாவில் இயக்குநர் பாரதிராஜா தலைமை தாங்கி திருமணத்தை நடத்தி வைத்தார். மற்றும், இயக்குநர் சற்குணம், நடிகர் விமல் உள்ளிட்ட திரையுல பிரபலங்கள் பலர் இந்த திருமண விழாவில் கலந்துக்கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.
மணப்பெண் மோகனப்ரியா, வருவாய் துறையில் உதவி பிரிவு அலுவலராக பணியாற்றி வருகிறார்.
இயக்குநர் ஷெரீஃப் தனது முதல் படமான ‘ரணம் அறம் தவறேல்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, இதயபூர்வமாக கற்பனை செய்த கதையை, தயாரிப்பாளர் ஜெய் கிரண் (ஆதிமூலம் கிரியேஷன்ஸ்) உறுதியுடன் கையில் எடுத்ததின் விளைவாக உருவானது ‘காந்தி கண்ணாடி’...
விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன்ஸ் தயாரிப்பில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கும் சக்தி திருமகன் படத்தின் முன் வெளியீட்டு விழா 10...
’டார்லிங் - 2’(2016) ஹாரர் காமெடி படத்தையும், ’விதிமதி உல்டா’ (2017) திரில்லர் படத்தையும் தயாரித்து கதாநாயகனாகவும் நடித்து தமிழ்த் திரையுலகிற்கு புதிய கதாநாயகனாகவும், தயாரிப்பாளராகவும் அறிமுகமானவர் ரமீஸ் ராஜா...