’சர்கார்’, ‘மாரி 2’ ஆகிய படங்களை தொடர்ந்து வரலட்சுமி நடிப்பில் ‘நீயா 2’, ‘வெல்வெட் நகரம்’ ஆகியப் படங்கள் விரைவில் வெளியாக உள்ள நிலையில், தமிழ் மட்டும் இன்றி தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழித் திரைப்படங்களிலும் வரலட்சுமி பிஸியாக நடித்து வருகிறார்.
தற்போது ‘ரணம்’ என்ற கன்னடப் படத்தில் சிபிஐ கதாபாத்திரத்தில் வரலட்சுமி நடித்து வருகிறார். வி.சமுத்ரா என்பவர் இயக்கும் இப்படத்தில் ஹீரோவாக நடிகர் அர்ஜுனின் சகோதரின் மகன் சிரஞ்சீவி சர்ஜூன் நடிக்கிறார்.
இந்நிலையில் இப்படத்தின் சண்டைக்காட்சி ஒன்று பெங்களூருக்கு அருகிலுள்ள பாகலூரில் படமாக்கப்பட்டது. அக்காட்சியில் இரண்டு கார்கள் மோதி தீப்பிடிப்பது போன்று காட்சியமைக்கப்பட்டது. அந்த சமயத்தில் அருகில் வைத்திருந்த கேஸ் சிலிண்டரில் தீப்பற்றி வெடித்து சிதறியது.
அதனால் வேடிக்கை பார்க்க வந்த ஐந்து வயது சிறுமியும் அவரது அம்மாவும், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் இருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தால் இருவர் உயிரிழந்த சம்பவத்தால் கன்னட சினிமாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சுரஜ் புரொடக்ஷன்ஸ் சார்பில் ரமேஷ் ரெட்டி தயாரிப்பில், டாக்டர்...
60 ஆண்டுகளுக்கும் அதிகமாக இந்தியாவின் மிகவும் நம்பகமான ஆபரண நிறுவனமாக இயங்கி வரும் ஜோஸ் ஆலுக்காஸ், பிரபல நடிகர் துல்கர் சல்மான் தனது பிராண்டின் விளம்பரத் தூதராக இணைந்திருப்பதை பெருமகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளது...
டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் (TKM) மற்றும் DRUM TAO ஆகியவை இரண்டாவது முறையாக சென்னைக்கு மறக்க முடியாத ஆற்றல் மற்றும் தாள கலவையை கொண்டு வந்தன, மக்களின் தேவைக்கேற்ப மீண்டும் வந்தன...