தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநராக வலம் வந்த மகேந்திரனை, ஒரு நடிகராக தமிழ் சினிமாவுக்கு அடையாளம் காட்டியது விஜயின் ‘தெறி’ படம் தான். இயக்குநர் அட்லீயின் அன்பு வேண்டுகோளை ஏற்று அப்படத்தில் இயக்குநர் மகேந்திரன் மாஸ் வில்லனாக நடித்திருந்தார்.
‘தெறி’ படப்பிடிப்பின் போது விஜயை மகேந்திரன் நாற்காலி ஒன்றில் கட்டிப் போட்டுவிட்டு அவரிடம் வசனம் பேசுவது போலவும், அப்போது விஜய் அந்த நாற்காலியை உடைத்துக் கொண்டு சண்டை போடுவது போன்றும் காட்சி வடிவமைக்கப்பட்டிருந்தது.
விஜயை கட்டிப்போட வைத்திருந்த நாற்காலியில் ஏகப்பட்ட ஆணிகள் அடித்திருந்ததை பார்த்த இயக்குநர் மகேந்திரன், “விஜய் ஆணியுடன் மட்டும் விளையாடாதீங்க, ஒரு ஆணி குத்தினால், அது செப்டிக்காகி பல துன்பங்களையும் கொடுக்கும்” என்று செல்லமாக கண்டித்ததாக, முன்னணி சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியிருந்தார்.
அதேபோல், விஜையும் மகேந்திரனிடம் வந்து இந்த இடம் உங்களுக்கானதாக இல்லை, என்று தானே நினைக்கிறீர்கள், என்று கூறியதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
‘தெறி’ படத்திற்குப் பிறகு தொடர்ந்து பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் மகேந்திரன் நடித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சுரஜ் புரொடக்ஷன்ஸ் சார்பில் ரமேஷ் ரெட்டி தயாரிப்பில், டாக்டர்...
60 ஆண்டுகளுக்கும் அதிகமாக இந்தியாவின் மிகவும் நம்பகமான ஆபரண நிறுவனமாக இயங்கி வரும் ஜோஸ் ஆலுக்காஸ், பிரபல நடிகர் துல்கர் சல்மான் தனது பிராண்டின் விளம்பரத் தூதராக இணைந்திருப்பதை பெருமகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளது...
டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் (TKM) மற்றும் DRUM TAO ஆகியவை இரண்டாவது முறையாக சென்னைக்கு மறக்க முடியாத ஆற்றல் மற்றும் தாள கலவையை கொண்டு வந்தன, மக்களின் தேவைக்கேற்ப மீண்டும் வந்தன...