தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநராக வலம் வந்த மகேந்திரனை, ஒரு நடிகராக தமிழ் சினிமாவுக்கு அடையாளம் காட்டியது விஜயின் ‘தெறி’ படம் தான். இயக்குநர் அட்லீயின் அன்பு வேண்டுகோளை ஏற்று அப்படத்தில் இயக்குநர் மகேந்திரன் மாஸ் வில்லனாக நடித்திருந்தார்.
‘தெறி’ படப்பிடிப்பின் போது விஜயை மகேந்திரன் நாற்காலி ஒன்றில் கட்டிப் போட்டுவிட்டு அவரிடம் வசனம் பேசுவது போலவும், அப்போது விஜய் அந்த நாற்காலியை உடைத்துக் கொண்டு சண்டை போடுவது போன்றும் காட்சி வடிவமைக்கப்பட்டிருந்தது.
விஜயை கட்டிப்போட வைத்திருந்த நாற்காலியில் ஏகப்பட்ட ஆணிகள் அடித்திருந்ததை பார்த்த இயக்குநர் மகேந்திரன், “விஜய் ஆணியுடன் மட்டும் விளையாடாதீங்க, ஒரு ஆணி குத்தினால், அது செப்டிக்காகி பல துன்பங்களையும் கொடுக்கும்” என்று செல்லமாக கண்டித்ததாக, முன்னணி சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியிருந்தார்.
அதேபோல், விஜையும் மகேந்திரனிடம் வந்து இந்த இடம் உங்களுக்கானதாக இல்லை, என்று தானே நினைக்கிறீர்கள், என்று கூறியதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
‘தெறி’ படத்திற்குப் பிறகு தொடர்ந்து பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் மகேந்திரன் நடித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்க, அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா நடிப்பில் வெளியான 'தாய் கிழவி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது...
வ்யோம் என்டர்டெயின்மென்ட்ஸ் (Vyom Entertainments) நிறுவனம் சார்பில் விஜயா சதிஷ் மற்றும் ஆர்...
மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்க, மிகப்பெரிய படைப்பாக உருவாகி வரும் ’பேட்ரியாட்' திரைப்படத்தில் நடிகை நயன்தாரா நடித்துள்ள கதாபாத்திரத்தின் சிறப்பு போஸ்டர் பெண்கள் தினத்தை முன்னிட்டு நேற்று முன் தினம் வெளியிடப்பட்டுள்ளது...