கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை திரைப்படமாக்க பலர் முயற்சித்து வந்த நிலையில், இன்று வரை அது நடக்காமல் உள்ளது. கடந்த சில் ஆண்டுகளுக்கு முன்பு இயக்குநர் மணிரத்னம், பொன்னியில் செல்வன் நாவலை படமாக்க முடிவு செய்து, அதற்கான ஆரம்ப கட்ட வேலைகளில் ஈடுபட்டார். ஆனால், மிகப்பெரிய பட்ஜெட் தேவைப்படும் என்பதால் அந்த முயற்சியை அப்போது அவர் கைவிட்டுவிட்டார்.
இதற்கிடையே, மீண்டும் பொன்னியின் செல்வன் படத்தை துவங்கியிருக்கும் மணிரத்னம், தற்போது நடிகர், நடிகைகள் தேர்வில் கவனம் செலுத்தி வருகிறார். அதன்படி, மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் ஐஸ்வர்யா ராய், அமிதாப்பச்சன், மோகன்பாபு, ஜெயம் ரவி, விக்ரம், கீர்த்தி சுரேஷ், கார்த்தி ஆகியோர் நடிக்க ஓகே சொல்லியிருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், பல முன்னணி நடிகர்களின் படங்களை தயாரித்து வரும் லைகா நிறுவனம், ‘பொன்னியின் செல்வன்’ படத்தை தயாரிக்க முன்வந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து இயக்குநர் மணிரத்னம் மற்றும் லைகா நிறுவனம் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை வெற்றியடைந்திருப்பதாகவும், லைகா நிறுவனம் பொன்னியின் செல்வன் படத்தை தயாரிக்க சம்மதம் தெரிவித்து விட்டதாகவும் கூறப்படுகிறது.
நடிகர், நடிகைகள் ஒப்பந்தம் முடிந்த பிறகு, ‘பொன்னியின் செல்வன்’ படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை லைகா நிறுவனம் வெளியிட இருப்பதாகவும் கூறப்படுகிறது.
லைகா நிறுவனத்தின் தயாரிப்பில், மணிரத்னம் இயக்கிய ‘செக்கச் சிவந்த வானம்’ வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்க, அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா நடிப்பில் வெளியான 'தாய் கிழவி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது...
வ்யோம் என்டர்டெயின்மென்ட்ஸ் (Vyom Entertainments) நிறுவனம் சார்பில் விஜயா சதிஷ் மற்றும் ஆர்...
மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்க, மிகப்பெரிய படைப்பாக உருவாகி வரும் ’பேட்ரியாட்' திரைப்படத்தில் நடிகை நயன்தாரா நடித்துள்ள கதாபாத்திரத்தின் சிறப்பு போஸ்டர் பெண்கள் தினத்தை முன்னிட்டு நேற்று முன் தினம் வெளியிடப்பட்டுள்ளது...