தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக உள்ள மோகன் பாபு, தனது மகன் விஷ்ணு மஞ்சுவை வைத்து ‘சலீம்’ என்ற படத்தை தயாரித்திருந்தார். இப்படத்தை ஒய்விஎஸ் செளத்ரி இயக்கியிருந்தார்.
இந்த நிலையில், இயக்குநர் ஒய்விஎஸ் செளத்ரி, ‘சலீம்’ படத்திற்காக தனக்கு ழங்கப்பட்ட செக் செல்லுபடி ஆகததால், இது குறித்து மோகன் பாபுவிடம் கேட்க, அவர் அதற்கு சரியான பதில் அளிக்கவில்லை என்று தெரிகிறது. உடனே இது தொடர்பாக நீதிமன்றத்தில் இயக்குநர் செளத்ரி வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு விசாரணை தற்போது முடிந்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதில், நடிகர் மோகன் பாபுக்கு ஒரு வருடம் சிறை தண்டனையும், 41 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால், இந்த தகவலை மறுத்திருக்கும் மோகன் பாபு, தனது ட்விட்டர் பக்கத்தில், சில தொலைக்காட்சிகள் பொய்யான செய்திகள் பரப்புவதை இப்போது தான் தெரிந்து கொண்டேன். நான் ஐதராபாத்தில் உள்ள என் வீட்டில் இருக்கிறேன், என்று பதிவிட்டுள்ளார்.
பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்க, அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா நடிப்பில் வெளியான 'தாய் கிழவி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது...
வ்யோம் என்டர்டெயின்மென்ட்ஸ் (Vyom Entertainments) நிறுவனம் சார்பில் விஜயா சதிஷ் மற்றும் ஆர்...
மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்க, மிகப்பெரிய படைப்பாக உருவாகி வரும் ’பேட்ரியாட்' திரைப்படத்தில் நடிகை நயன்தாரா நடித்துள்ள கதாபாத்திரத்தின் சிறப்பு போஸ்டர் பெண்கள் தினத்தை முன்னிட்டு நேற்று முன் தினம் வெளியிடப்பட்டுள்ளது...