நடிகை, நடிகர் சிலர் குடி போதையில் வாகனம் ஓட்டுவதும், போலீசிடம் சிக்குவதும் அவ்வபோது நடக்கின்றது. நடிகர் ஜெய், நடிகை காயத்ரி ரகுராம் போன்றவர்கள் இதுபோன்ற விவகாரங்களில் ஈடுபட்ட நிலையில், தற்போது நடிகை ஒருவர் மது போதையில் போலீசாரையே தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மும்பையை சேர்ந்த மாடல் அழகியும், டிவி நடிகையுமான ரூகி சிங், கடந்த 31 ஆம் தேதி தனது இரண்டு ஆண் நண்பர்களுடன் ஓட்டல் ஒன்றுக்கு சென்றிருக்கிறார். அப்போது குடி போதையில் இருந்த நடிகை ரூகி சிங், ஓட்டல் ஊழியர்களுடன் தகராரில் ஈடுபட்டதால், போலீசுக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. உடனே சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், இரு தரப்பினரையும் சமாதானம் செய்ய முயன்றதாக தெரிகிறது.
இந்த நிலையில், மது போதை தலைக்கேறியதால் நடிகை ரூகி சிங், போலீஸ்காரர்களின் ஆடைகளை பிடித்து இழுத்து அவர்களை சரமாரியாக தாக்கியுள்ளார். அதன் பின், தனது நண்பர்களுடன் அங்கிருந்து காரில் புறப்பட்டவர், சான்டாக்ரூஸ் சாலையில் நின்றிருந்த வாகனங்கள் மீது மோதியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
உடனே, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், நள்ளிரவு நேரம் என்பதால் நடிகை ரூகி சிங்கை கைது செய்யாமல், அவர் மீது சில பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இயக்குநர் அதியன் ஆதிரை இயக்கத்தில் தினேஷ், கலையரசன், முத்துக்குமார், ரித்விகா, வின்சு, ஷபீர், பாலசரவணன், யுவன் மயில்சாமி மற்றும் பலர் நடித்திருக்கும் படம் ’தண்டகாரண்யம்’...
சிறு முதலீட்டு படங்களாக இருந்தாலும், மக்களை கவரும் வகையிலான கதை மற்றும் திரைக்கதையோடு வெளியாகும் பல படங்களில் வெற்றி பெற்று வருகிறது...
ஜேசன் ஸ்டுடியோஸ், சச்சின் சினிமாஸ், ஸ்ரீதயாகரன் சினி புரொடக்ஷன், மை ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் உதயா, தயா என்...