நடிகை, நடிகர் சிலர் குடி போதையில் வாகனம் ஓட்டுவதும், போலீசிடம் சிக்குவதும் அவ்வபோது நடக்கின்றது. நடிகர் ஜெய், நடிகை காயத்ரி ரகுராம் போன்றவர்கள் இதுபோன்ற விவகாரங்களில் ஈடுபட்ட நிலையில், தற்போது நடிகை ஒருவர் மது போதையில் போலீசாரையே தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மும்பையை சேர்ந்த மாடல் அழகியும், டிவி நடிகையுமான ரூகி சிங், கடந்த 31 ஆம் தேதி தனது இரண்டு ஆண் நண்பர்களுடன் ஓட்டல் ஒன்றுக்கு சென்றிருக்கிறார். அப்போது குடி போதையில் இருந்த நடிகை ரூகி சிங், ஓட்டல் ஊழியர்களுடன் தகராரில் ஈடுபட்டதால், போலீசுக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. உடனே சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், இரு தரப்பினரையும் சமாதானம் செய்ய முயன்றதாக தெரிகிறது.

இந்த நிலையில், மது போதை தலைக்கேறியதால் நடிகை ரூகி சிங், போலீஸ்காரர்களின் ஆடைகளை பிடித்து இழுத்து அவர்களை சரமாரியாக தாக்கியுள்ளார். அதன் பின், தனது நண்பர்களுடன் அங்கிருந்து காரில் புறப்பட்டவர், சான்டாக்ரூஸ் சாலையில் நின்றிருந்த வாகனங்கள் மீது மோதியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
உடனே, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், நள்ளிரவு நேரம் என்பதால் நடிகை ரூகி சிங்கை கைது செய்யாமல், அவர் மீது சில பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

சுரஜ் புரொடக்ஷன்ஸ் சார்பில் ரமேஷ் ரெட்டி தயாரிப்பில், டாக்டர்...
60 ஆண்டுகளுக்கும் அதிகமாக இந்தியாவின் மிகவும் நம்பகமான ஆபரண நிறுவனமாக இயங்கி வரும் ஜோஸ் ஆலுக்காஸ், பிரபல நடிகர் துல்கர் சல்மான் தனது பிராண்டின் விளம்பரத் தூதராக இணைந்திருப்பதை பெருமகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளது...
டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் (TKM) மற்றும் DRUM TAO ஆகியவை இரண்டாவது முறையாக சென்னைக்கு மறக்க முடியாத ஆற்றல் மற்றும் தாள கலவையை கொண்டு வந்தன, மக்களின் தேவைக்கேற்ப மீண்டும் வந்தன...