கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியான ‘கே.ஜி.எப்’ என்ற படம் மிகப்பெரிய வெற்றிப் பெற்றது. கன்னட சினிமாவின் முன்னணி நடிகரான யாஷ், ஹீரோவாக நடித்த இப்படம், கன்னடம் மட்டும் இன்றி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் வெளியாகி பெரும் வரவேற்பு பெற்றது.
வளர்ந்து வரும் தொழில்நுட்ப கலைஞர்கள் பணியாற்றிய இப்படத்தின் மேக்கிங் மற்றும் பிரம்மாண்டம் பெரிதும் பாராட்டப்பட்டது. கோலார் தங்க வயலை கதைக்களமாக கொண்ட இப்படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் வெளியாக உள்ள நிலையில், இப்படத்தில் முக்கிய வில்லன் வேடத்தில் நடித்த கருடாராம், தமிழ் சினிமாவில் அறிமுகமாக உள்ளார்.

‘தேவ்’ படத்தை தொடர்ந்து கார்த்தி தற்போது ‘கைதி’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு பிறகு ’ரெமோ’ படத்தை இயக்கிய பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் ஒரு படத்தில் கார்த்தி நடிக்க உள்ளார். இப்படத்தில் தான் கன்னட நடிகர் கருடாராம், வில்லனாக நடிக்கிறார். இதில் ஹீரோயினாக பிரபல் தெலுங்கு நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.

பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்க, அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா நடிப்பில் வெளியான 'தாய் கிழவி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது...
வ்யோம் என்டர்டெயின்மென்ட்ஸ் (Vyom Entertainments) நிறுவனம் சார்பில் விஜயா சதிஷ் மற்றும் ஆர்...
மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்க, மிகப்பெரிய படைப்பாக உருவாகி வரும் ’பேட்ரியாட்' திரைப்படத்தில் நடிகை நயன்தாரா நடித்துள்ள கதாபாத்திரத்தின் சிறப்பு போஸ்டர் பெண்கள் தினத்தை முன்னிட்டு நேற்று முன் தினம் வெளியிடப்பட்டுள்ளது...