கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியான ‘கே.ஜி.எப்’ என்ற படம் மிகப்பெரிய வெற்றிப் பெற்றது. கன்னட சினிமாவின் முன்னணி நடிகரான யாஷ், ஹீரோவாக நடித்த இப்படம், கன்னடம் மட்டும் இன்றி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் வெளியாகி பெரும் வரவேற்பு பெற்றது.
வளர்ந்து வரும் தொழில்நுட்ப கலைஞர்கள் பணியாற்றிய இப்படத்தின் மேக்கிங் மற்றும் பிரம்மாண்டம் பெரிதும் பாராட்டப்பட்டது. கோலார் தங்க வயலை கதைக்களமாக கொண்ட இப்படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் வெளியாக உள்ள நிலையில், இப்படத்தில் முக்கிய வில்லன் வேடத்தில் நடித்த கருடாராம், தமிழ் சினிமாவில் அறிமுகமாக உள்ளார்.
‘தேவ்’ படத்தை தொடர்ந்து கார்த்தி தற்போது ‘கைதி’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு பிறகு ’ரெமோ’ படத்தை இயக்கிய பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் ஒரு படத்தில் கார்த்தி நடிக்க உள்ளார். இப்படத்தில் தான் கன்னட நடிகர் கருடாராம், வில்லனாக நடிக்கிறார். இதில் ஹீரோயினாக பிரபல் தெலுங்கு நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.
இயக்குநர் அதியன் ஆதிரை இயக்கத்தில் தினேஷ், கலையரசன், முத்துக்குமார், ரித்விகா, வின்சு, ஷபீர், பாலசரவணன், யுவன் மயில்சாமி மற்றும் பலர் நடித்திருக்கும் படம் ’தண்டகாரண்யம்’...
சிறு முதலீட்டு படங்களாக இருந்தாலும், மக்களை கவரும் வகையிலான கதை மற்றும் திரைக்கதையோடு வெளியாகும் பல படங்களில் வெற்றி பெற்று வருகிறது...
ஜேசன் ஸ்டுடியோஸ், சச்சின் சினிமாஸ், ஸ்ரீதயாகரன் சினி புரொடக்ஷன், மை ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் உதயா, தயா என்...