தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாரான நயன்தாரா, நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘ஐரா’ படம் எதிர்ப்பார்த்த வெற்றியை பெறவில்லை என்றாலும், தற்போதும் தமிழகத்தின் பல திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்தை தொடர்ந்து நயன்தாராவின் நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள படம் ‘கொலையுதிர் காலம்’.
இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் தான், நடிகர் ராதாரவி எக்குதப்பாக பேசி சர்ச்சையில் சிக்கினார் என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான்.
இந்த நிலையில், கொலையுதிர் காலம் படம் குறித்து கருத்து தெரிவித்த இயக்குநரும் நயனின் காதலருமான விக்னேஷ் சிவன், படம் முழுமையாக முடியவில்லை, என்று கூறினார். இது படக்குழுவினரை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

படம் முடிவடைந்து, வியாபாரம் குறித்த பேச்சு வர்த்தை தொடங்க இருக்கும் நிலையில், விக்னேஷ் சிவன், படம் முடிவடையவில்லை, என்று கூறியிருப்பது படத்தின் வியாபாரத்திற்கு பின்னடைவை தரும் என்பதால், தவறான தகவல் வெளியிட்ட விகெனேஷ் சிவன், மீது தயாரிப்பு தரப்பு வழக்கு தொடர முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அஜித்தின் ‘பில்லா 2’, கமல்ஹாசனின் ‘உன்னைப் போல் ஒருவன்’ ஆகிய படங்களை இயக்கிய சக்ரி டோல்டி ’கொலையுதிர் காலம்’ படத்தை இயக்கியுள்ளார்.
பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்க, அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா நடிப்பில் வெளியான 'தாய் கிழவி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது...
வ்யோம் என்டர்டெயின்மென்ட்ஸ் (Vyom Entertainments) நிறுவனம் சார்பில் விஜயா சதிஷ் மற்றும் ஆர்...
மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்க, மிகப்பெரிய படைப்பாக உருவாகி வரும் ’பேட்ரியாட்' திரைப்படத்தில் நடிகை நயன்தாரா நடித்துள்ள கதாபாத்திரத்தின் சிறப்பு போஸ்டர் பெண்கள் தினத்தை முன்னிட்டு நேற்று முன் தினம் வெளியிடப்பட்டுள்ளது...