Latest News :

விக்னேஷ் சிவன் மீது வழக்கு! - நயன்தாரா பட தயாரிப்பாளர் அதிரடி
Thursday April-04 2019

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாரான நயன்தாரா, நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘ஐரா’ படம் எதிர்ப்பார்த்த வெற்றியை பெறவில்லை என்றாலும், தற்போதும் தமிழகத்தின் பல திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்தை தொடர்ந்து நயன்தாராவின் நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள படம் ‘கொலையுதிர் காலம்’.

 

இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் தான், நடிகர் ராதாரவி எக்குதப்பாக பேசி சர்ச்சையில் சிக்கினார் என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான்.

 

இந்த நிலையில், கொலையுதிர் காலம் படம் குறித்து கருத்து தெரிவித்த இயக்குநரும் நயனின் காதலருமான விக்னேஷ் சிவன், படம் முழுமையாக முடியவில்லை, என்று கூறினார். இது படக்குழுவினரை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

 

Nayanthara

 

படம் முடிவடைந்து, வியாபாரம் குறித்த பேச்சு வர்த்தை தொடங்க இருக்கும் நிலையில், விக்னேஷ் சிவன், படம் முடிவடையவில்லை, என்று கூறியிருப்பது படத்தின் வியாபாரத்திற்கு பின்னடைவை தரும் என்பதால், தவறான தகவல் வெளியிட்ட விகெனேஷ் சிவன், மீது தயாரிப்பு தரப்பு வழக்கு தொடர முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

அஜித்தின் ‘பில்லா 2’, கமல்ஹாசனின் ‘உன்னைப் போல் ஒருவன்’ ஆகிய படங்களை இயக்கிய சக்ரி டோல்டி ’கொலையுதிர் காலம்’ படத்தை இயக்கியுள்ளார்.

Related News

4528

’45’ படம் தனி உலகம்! – நடிகர் சிவராஜ்குமார் கூறிய சுவாரஸ்ய தகவல்
Monday December-22 2025

சுரஜ் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் ரமேஷ் ரெட்டி தயாரிப்பில், டாக்டர்...

பிரபல ஆபரண நிறுவனத்தின் விளம்பரத் தூதரான நடிகர் துல்கர் சல்மான்!
Monday December-22 2025

60 ஆண்டுகளுக்கும் அதிகமாக இந்தியாவின் மிகவும் நம்பகமான ஆபரண நிறுவனமாக இயங்கி வரும் ஜோஸ் ஆலுக்காஸ், பிரபல நடிகர் துல்கர் சல்மான் தனது பிராண்டின் விளம்பரத் தூதராக இணைந்திருப்பதை பெருமகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளது...

சென்னையைக் கவர்ந்த டொயோட்டாவின் ’டிரம் டாவோ’ இசை நிகழ்ச்சி!
Monday December-22 2025

டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் (TKM) மற்றும் DRUM TAO ஆகியவை இரண்டாவது முறையாக சென்னைக்கு மறக்க முடியாத ஆற்றல் மற்றும் தாள கலவையை கொண்டு வந்தன, மக்களின் தேவைக்கேற்ப மீண்டும் வந்தன...

Recent Gallery