தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் அஜித், தனக்கென்று தனி பாதை வகுத்துக் கொண்டு பயணிக்கிறார். ரசிகர்கள் வேண்டாம் என்று கூறியவர், தனது பட விழாக்களில் கூட கலந்துக் கொள்வதில்லை. அதேபோல், எந்த தொலைக்காட்சிக்கும் அஜித் தற்போது பேட்டி கொடுப்பதில்லை.
ஆரம்பத்தில் தொலைக்காட்சிகளுக்கும், பத்திரிகைகளுக்கும் பேட்டி கொடுத்த அஜித், பத்திரிகையாளர்களையும் வருடத்திற்கு இரண்டு முறை சந்தித்து வந்தார். தற்போது அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்.
எதனால் அஜித், இப்படி ஒதுங்கிப் போகிறார், என்று பலர் பல விதத்தில் யோசித்தாலும், யாருக்கும் உண்மையான காரணம் மட்டும் தெரியவில்லை.
இந்த நிலையில், அஜித் பத்திரிகைகள் மற்றும் தொலைக்காட்சிகளில் பேச மறுப்பதற்கான காரணத்தை பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளரும், நடிகருமான கோபிநாத் தெரிவித்திருக்கிறார்.
அஜித்தை கோபிநாத் பேட்டி எடுத்த போது இது குறித்து அவரிடம் கேட்டிருக்கிறார். அதற்கு அஜித், “சார் நான் ஆரம்பத்தில் தமிழை தவறாக பேசினேன், அப்போது ஒரு மாதிரி பேசினார்கள்.
சரி ஆங்கிலத்தில் பேசினேன், ஒரு தமிழ் நடிகன் ஆங்கிலத்தில் பேசுவதா? என்று அதற்கும் திட்டினார்கள்.
இனி பேசவே வேண்டாம் என்றேன், அஜித் என்ன அவ்வளவு பெரிய ஆளா, பேசமாட்டாரா? என்று கூறினார்கள், என்ன செய்வது என்றே தெரியாமல் தான் இப்படி ஒரு முடிவு எடுத்தேன்.” என்று கூறியிருக்கிறார்.
பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்க, அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா நடிப்பில் வெளியான 'தாய் கிழவி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது...
வ்யோம் என்டர்டெயின்மென்ட்ஸ் (Vyom Entertainments) நிறுவனம் சார்பில் விஜயா சதிஷ் மற்றும் ஆர்...
மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்க, மிகப்பெரிய படைப்பாக உருவாகி வரும் ’பேட்ரியாட்' திரைப்படத்தில் நடிகை நயன்தாரா நடித்துள்ள கதாபாத்திரத்தின் சிறப்பு போஸ்டர் பெண்கள் தினத்தை முன்னிட்டு நேற்று முன் தினம் வெளியிடப்பட்டுள்ளது...