’பேட்ட’ யை தொடர்ந்து ரஜினிகாந்த் அடுத்ததாக ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்தில் ஹீரோயினாக நயன்தாரா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்ய இருக்கிறார். பிற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், ரஜினியின் புதிய படத்தில் பிரபல இயக்குநரும் நடிகருமான எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. ஆனால், இந்த தகவலை ரஜினி தரப்பு மறுத்திருக்கிறது.
மேலும், ரஜினிகாந்தின் 167 படத்தில் வில்லனாக எஸ்.ஜே.சூர்யா நடிப்பதாக வெளியான தகவல் மற்றும் செய்திகள் அனைத்தும் பொய். இதுபோன்ற வதந்திகளை தயவு செய்து யாரும் பரபரப்ப வேண்டாம், என்றும் ரஜினி தரப்பு கேட்டுக்கொண்டுள்ளனர்.
தற்போது நடைபெற்று வரும் நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு முழுவதுமாக முடிவடைந்த பிறகு, ரஜினியின் 167 வது பற்றிய அதிகாரப்பூர்வமான விபரங்களை படக்குழுவி வெளியிட இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
இயக்குநர் அதியன் ஆதிரை இயக்கத்தில் தினேஷ், கலையரசன், முத்துக்குமார், ரித்விகா, வின்சு, ஷபீர், பாலசரவணன், யுவன் மயில்சாமி மற்றும் பலர் நடித்திருக்கும் படம் ’தண்டகாரண்யம்’...
சிறு முதலீட்டு படங்களாக இருந்தாலும், மக்களை கவரும் வகையிலான கதை மற்றும் திரைக்கதையோடு வெளியாகும் பல படங்களில் வெற்றி பெற்று வருகிறது...
ஜேசன் ஸ்டுடியோஸ், சச்சின் சினிமாஸ், ஸ்ரீதயாகரன் சினி புரொடக்ஷன், மை ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் உதயா, தயா என்...