தமிழ் சினிமாவில் வாரத்திற்கு நான்கு முதல் ஆறு படங்கள் வரை வெளியாகிறது, ஆனால், இதில் ஒரு சில படங்கள் மட்டுமே ரசிகர்களிடம் சென்றடைகிறது. ஒரு சில ஏன், ஒரு படம் தான். இதற்கு காரணம், இப்படி கொத்தாக படங்கள் வெளியாவது ஒன்றாக இருந்தாலும், சரியான முறையில் தயாரிப்பாளர்கள் விளம்பரம் செய்யாததும் ஒரு காரணமாக இருக்கிறது.
அதிலும், பெரிய தயாரிப்பு நிறுவனம் தயாரித்த படம் ஒன்று, விமர்சன ரீதியாக பாராட்டு பெற்ற பிறகும் தோல்வியடைந்திருப்பது திரையுலகினரை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
நடிகர் சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிப்பில் வெளியான ‘உறியடி 2’ நல்ல படம் என்று விமர்சகர்கள் மூலம் பாராட்டு பெற்றலாம், படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்திருப்பதாக சினிமா வியாபாரிகள் சிலர் கூறியிருக்கிறார்கள்.
அதற்கு முக்கிய காரணம், படத்திற்கு தயாரிப்பாளரான நடிகர் சூர்யா போதிய விளம்பரம் செய்யாமல் போனது தானாம். இந்த படத்திற்கு தியேட்டர் கிடைத்ததே அது சூர்யாவின் படம் என்பதால் தான். காரணம் படத்தில் ஹீரோ உள்ளிட்ட எந்த நடிகர்களும் பரிச்சயமானவர்கள் இல்லை. படத்தின் இயக்குநர் விஜயகுமார் தான் ஹீரோ. மற்ற நடிகர் நடிகைகளும் புதுமுகங்கள், அதிகம் பரிச்சயம் இல்லாதவர்களாக இருப்பதால், படத்திற்கு சரியான முறையில் விளம்பரம் செய்திருந்தால் படம் நிச்சயம் குறைந்தது 3 வாரமாவாது ஓடியிருக்குமாம்.
ஆனால், சூர்யாவின் மற்றும் 2டி நிறுவனத்தின் மெத்தன போக்கினால், படம் வெளியான முதல் நாளே கூட்டம் வராமல் காட்சிகள் ரத்தானதாகவும், படம் வெளியானதில் இருந்து இரவுக் காட்சிகளே கொடுக்கப்படவில்லை, என்றும் கூறப்படுகிறது.
சுரஜ் புரொடக்ஷன்ஸ் சார்பில் ரமேஷ் ரெட்டி தயாரிப்பில், டாக்டர்...
60 ஆண்டுகளுக்கும் அதிகமாக இந்தியாவின் மிகவும் நம்பகமான ஆபரண நிறுவனமாக இயங்கி வரும் ஜோஸ் ஆலுக்காஸ், பிரபல நடிகர் துல்கர் சல்மான் தனது பிராண்டின் விளம்பரத் தூதராக இணைந்திருப்பதை பெருமகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளது...
டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் (TKM) மற்றும் DRUM TAO ஆகியவை இரண்டாவது முறையாக சென்னைக்கு மறக்க முடியாத ஆற்றல் மற்றும் தாள கலவையை கொண்டு வந்தன, மக்களின் தேவைக்கேற்ப மீண்டும் வந்தன...