இயக்குநர் வெங்கட் பிரபுவின் பிளாக் டிக்கெட் நிறுவனம் தயாரிப்பில், சரவணராஜன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஆர்.கே.நகர்’ படம் இம்மாதம் 12 ஆம் தேதி வெளியாக இருந்த நிலையில், தற்போது அப்படத்தின் வெளியீட்டுக்கு சிலர் தடை போட்டிருக்கிறார்கள்.
படம் அரசியல் படம் என்பதால், தேர்தலுக்கு பிறகு ரிலீஸ் செய்துகொள்ளுமாறு சிலர் வெங்கட் பிரபுவிடம் கூறியிருக்கிறார்கள். அதன்படி, அவரும் தேர்தலுக்கு பிறகு படத்தை ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளார்.
அதே சமயம், படத்தை ரிலீஸ் செய்ய கூடாது, என்று தன்னி நிர்பந்தித்தவர்களின் பெயர்களை சொல்ல விரும்பாத வெங்கட் பிரபு, நாங்கள் செய்யாத தவறுக்காக படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளி வைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறோம். ‘ஆர்.கே.நகர்’ அரசியல் படம் அல்ல, பொழுதுபோக்கான படம், என்று தெரிவித்திருக்கிறார்.
மொத்தத்தில், அரசியல் காரணங்களுக்காக வெங்கட் பிரபுவின் ‘ஆர்.கே.நகர்’ படத்தை ரிலீஸ் செய்யவிடாமல் சில அரசியல் கட்சிகள் செய்திருப்பது மட்டும் தெரிகிறது.
இது தொடர்பான வெங்கட் பிரபுவின் வீடியோவை பார்க்க,
சுரஜ் புரொடக்ஷன்ஸ் சார்பில் ரமேஷ் ரெட்டி தயாரிப்பில், டாக்டர்...
60 ஆண்டுகளுக்கும் அதிகமாக இந்தியாவின் மிகவும் நம்பகமான ஆபரண நிறுவனமாக இயங்கி வரும் ஜோஸ் ஆலுக்காஸ், பிரபல நடிகர் துல்கர் சல்மான் தனது பிராண்டின் விளம்பரத் தூதராக இணைந்திருப்பதை பெருமகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளது...
டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் (TKM) மற்றும் DRUM TAO ஆகியவை இரண்டாவது முறையாக சென்னைக்கு மறக்க முடியாத ஆற்றல் மற்றும் தாள கலவையை கொண்டு வந்தன, மக்களின் தேவைக்கேற்ப மீண்டும் வந்தன...