தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோயினாக இருந்த குஷ்பு, தற்போது சீர்யல்களில் நடிப்பதோடு, சொந்தமாக திரைப்படம் மற்றும் சீரியல்களையும் தயாரித்து வருகிறார். அதே சமயம் தீவிர அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார்.
தற்போது, பாராளுமன்ற தேர்தலுக்கான பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள குஷ்புவை அமைச்சர் ஒருவர், ஆபாசமாக விமர்சித்திருப்பதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செய்தி தொடர்பாளராக இருக்கும் நடிகை குஷ்பு பிரசாரம் மேற்கொள்ளும் இடங்களில் கூட்டம் அலைமோதுகிறது. அவர் பங்குபெறும் பிரசார கூட்டத்திற்கு மக்களின் பெரும் ஆதரவு தருகிறார்கள்.
இந்த நிலையில், சமீபத்தில் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் செல்லூர் ராஜூவிடம், குஷ்புவின் பிரசாரம் குறித்து கேட்டதற்கு, “நடிகர், நடிகைகள் என்றாலே கூட்டம் கூடத்தான் செய்யும், அதேபோல் தான் குஷ்புவுக்கும். ஒரு காலத்தில் குஷ்புவுக்கு கோவில் கட்டினார்கள். ஆனால், இப்போது அவருக்கு வயதாகி விட்டது. அவருக்கு கூடும் கூட்டம் வாக்காக மாறிவிடாது.” என்றார்.

நடிகை ஒருவரை பார்த்து அவருக்கு வயதாகிவிட்டது, என்று அமைச்சர் கூறியதில், மறைமுகமாக அவரை ஆபாசமாக சீண்டியுள்ளதாக நெட்டிசன்கள் விமர்சித்துள்ளனர்.
மேலும், தெர்மாகோல் விவகாரத்தில் இன்ஜினியர்கள் தவறு செய்துவிட்டதாகவும், செல்லூர் ராஜூ தெரிவித்திருக்கிறார்.
பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்க, அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா நடிப்பில் வெளியான 'தாய் கிழவி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது...
வ்யோம் என்டர்டெயின்மென்ட்ஸ் (Vyom Entertainments) நிறுவனம் சார்பில் விஜயா சதிஷ் மற்றும் ஆர்...
மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்க, மிகப்பெரிய படைப்பாக உருவாகி வரும் ’பேட்ரியாட்' திரைப்படத்தில் நடிகை நயன்தாரா நடித்துள்ள கதாபாத்திரத்தின் சிறப்பு போஸ்டர் பெண்கள் தினத்தை முன்னிட்டு நேற்று முன் தினம் வெளியிடப்பட்டுள்ளது...