உதவி இயக்குநர்களின் கதையை திருடுவதாக, இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் மீது அவ்வபோது குற்றச்சாட்டுகள் எழும் நிலையில், தற்போது தன்னிடம் உதவி இயக்குநராக இருந்த ஒருவருக்கு அவர் கைகொடுக்க முன் வந்திருக்கிறார்.
‘எங்கேயும் எப்போதும்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் சரவணன். ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய இவர் தொடர்ந்து ‘இவன் வேறமாதிரி’, ‘வலியவன்’ ஆகிய படங்களை இயக்கினார். இதற்கிடையே விபத்தில் சிக்கிய சரவணன், பல மாதங்கள் ஓய்வில் இருந்தார்.

தற்போது மீண்டும் படம் இயக்க முயற்சித்து வந்த இயக்குநர் சரவணனுக்கு இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் கைகொடுத்திருக்கிறார். அவர் லைகா நிறுவனத்திடம் பேசி சரவணனுக்கு பட வாய்ப்பு பெற்று தந்ததோடு, அந்த படத்திற்கு கதையும் எழுதி கொடுக்கிறாராம்.
ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள ஆக்ஷன் படமாக உருவாக இருக்கும் இப்படத்தில் திரிஷா நடிக்க, பிற நடிகர் நடிகைகள் தேர்வு நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்க, அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா நடிப்பில் வெளியான 'தாய் கிழவி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது...
வ்யோம் என்டர்டெயின்மென்ட்ஸ் (Vyom Entertainments) நிறுவனம் சார்பில் விஜயா சதிஷ் மற்றும் ஆர்...
மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்க, மிகப்பெரிய படைப்பாக உருவாகி வரும் ’பேட்ரியாட்' திரைப்படத்தில் நடிகை நயன்தாரா நடித்துள்ள கதாபாத்திரத்தின் சிறப்பு போஸ்டர் பெண்கள் தினத்தை முன்னிட்டு நேற்று முன் தினம் வெளியிடப்பட்டுள்ளது...