செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் ‘என்.ஜி.கே’ வரும் மே 31 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இப்படத்தை தொடர்ந்து கே.வி.ஆனந்த் இயக்கத்தில் ‘காப்பான்’ படத்தில் சூர்யா நடித்து வருகிறார். தற்போது அப்படமும் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.
இந்த நிலையில், சூர்யாவின் 38 வது படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் சமீபத்தில் தொடங்கியது. ‘இறுதி சுற்று’ படத்தை இயக்கிய சுதா கொங்காரா இயக்கும் இப்படத்தின் தலைப்பு மற்றும் பஸ்ட் லுக் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
படத்திற்கு ’சூரரைப் போற்று’ என்று தலைப்புவைக்கப்பட்டுள்ளது. இதில் ஹீரோயினாக அபர்ணா பாலமுரளி நடிக்கிறார். சூர்யா ராணுவ வீரராக நடிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். நிக்கேத் பொம்மி ரெட்டி ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு சதிஷ் சூர்யா படத்தொகுப்பு செய்ய, ஜாக்கி கலையை நிர்மாணிக்கிறார்.

சூர்யாவின் நிறுவனமான 2டி எண்டர்டெயின்மெண்ட் மற்றும் சீக்யா எண்டர்டெயின்மெண்ட் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றன.
பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்க, அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா நடிப்பில் வெளியான 'தாய் கிழவி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது...
வ்யோம் என்டர்டெயின்மென்ட்ஸ் (Vyom Entertainments) நிறுவனம் சார்பில் விஜயா சதிஷ் மற்றும் ஆர்...
மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்க, மிகப்பெரிய படைப்பாக உருவாகி வரும் ’பேட்ரியாட்' திரைப்படத்தில் நடிகை நயன்தாரா நடித்துள்ள கதாபாத்திரத்தின் சிறப்பு போஸ்டர் பெண்கள் தினத்தை முன்னிட்டு நேற்று முன் தினம் வெளியிடப்பட்டுள்ளது...